Tuesday 21 April 2015

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 6

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர் -6
_______________________________________________________
மௌனகுரு
சங்க இலக்கியங்கள்.
_________________________
நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்கள் எட்டுத் தொகை நூல்களாகும்.
திருமுருகாற்றுப் படை, பொருனராற்றுப்படை, சிறபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை கூத்தராற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, ஆகிய நூல்கள் பத்துப் பாட்டு நூல்களாகும்.
தொகுத்த விதம்.
_____________________
இவை யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திலே தொகுக்கப்பட்ட நூல்களாகும்.
தொகுப்பெனில் ஏற்கனவே உள்ள பாடல்களைத் தொகுத்தலாகும்.
தொகுக்கும் போது தொகுத்தோர்கள்
1. அடிவரையறை
2. பொருள் மரபு
என்பன கொண்டு சங்க இலக்கியங்களைத் தொகுத்தனர்.
தொகுக்கும் போது குறுகிய அடிகள் கொண்டவற்றை எட்டுத் தொகைக்குள்ளும்
நீண்ட அடிகள் கொண்டவற்றைப் பத்துப் பாடல்களுகளுக்குள்ளும் அடக்கினர்.
அகப்பாடல்களின் தொகை முறைமைக்கு அவற்றின் அடியளவு அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
ஐங்குறு நூறு 3-6 அடிகள்
குறுந்தொகை 4-8 அடிகள்
நற்றிணை 9-12 அடிகள்
அகநானூறு 13-31 அடிகள்
புறப்பாடல்களுக்கு அடிவரையறை கொண்ட ஒரு தொகை முறை பேணப்படவில்லை.
எட்டுத் தொகையுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு அகநானூறு கலித்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், என்பன புறத்திணை சார்ந்தவை.
இவற்றுள் பதிற்றுப் பத்து சேரமன்னர்கள் பற்றியது. புறநானூறு எல்லா மன்னர்களையும் பற்றியது
.
பத்துப் பாட்டினுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை, நெடுநல்வாடை, என்பன அகத்திணை சார்ந்தவை ஆறு ஆற்றுப்படை நூல்களும் புறத்திணை சார்ந்தவை, (அரசர்கள் தலைவர்கள் பற்றியவை.)
மதுரைக்காஞ்சி நிலையாமை கூறுவது.
மதுரைக் காஞ்சியை நிலையாமை கூறும் காஞ்சித் திணையுள்ளும் நெடுநல்வாடையை, சுட்டிஒருவர் பெயர் கூறுவதால் புறத்திணையுள்ளும் அடக்கும் மரபு பிற்கால உரையாசிரியர்களால் ஏற்படுத்தப்பட்டது.
இத்தொகுப்பு முயற்சி மிக முக்கியமானதாகும்.
இலக்கியத்தினைத் தொகுக்கும் அல்லது கோவைப்படுத்தும் முயற்சி கடந்த கால, சமகால இலக்கியம் பற்றிய பிரக்ஞையின் வெளிப்பாடே.
தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த கால இலக்கியத் தேட்டத்தைத் திண்ணமாக நிலைபேறுடையதாகக்குவதற்கு எடுக்கப்பட்ட முதல் முயற்சி சங்க இலக்கியத் தொகுப்பு என்பர்.
எட்டுத் தொகை பத்துப்பாட்டு என்னும் பெயர்கள் பிற்காலத்தில் வழக்கில் வந்தவையே.
பத்துப்பாட்டு என்னும் சொற்றொடர் 11ம், 12ம், நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படும் பன்னிரு பாட்டியலிலேதான் முதலில் வருகிறது.
சங்க இலக்கியப் பாடற் தொகைகளைக் குறிக்கும் வகையில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் தொடர்கள் பயன்படுத்தப்படுவதை முதன்முதலில் தொல்காப்பியம் பொருளதிகாரம் 362,392,ஆம் சூத்திரங்களுக்காக 13ம் நூற்றாண்டில் பேராசிரியர் எழுதிய உரையிலும்
நன்னூல் 387ம் சூத்திரத்திற்கு 14ம் நூற்றாண்டில் மயிலை நாதர் உரையிலுமே காண்கிறோம் என்பார். கமில் சுவெலபில்.
தமிழிலே எழுத்து உருவான காலத்தில் பண்டைய வாய்மொழிப் பாடல்களை எழுத்தில் எழுதினர்.
அதன் பின்னர் அவை யாவும் தொகுக்கப்பட்டன
. புதிதாக எழுத்தில் எழுதிய பாடல்களும் தொகுக்கப்பட்டன.
தமிழ் நாட்டின் எழுத்து ஆரம்பத்திற்கும் சங்க இலக்கியத் தொகுப்பிற்குமிடையே நிறைந்த உறவுண்டு.
சங்க இலக்கியத்தைச் சமூக நோக்கில் விளங்க முனைபவரின் பெருங்கவனத்திற்குரிய முக்கியமான தகவல் இத்தொகை நூல்களைத் தொகுத்த புலவர்களது பெயரும் தொகுப்பித்த மன்னர்களது பெயரும் கிடைப்பது ஆகும்.

தொகுத்தோன் தொகுப்பித்தோன் விபரம் கீழே தரப்படுகிறது.
தொகுத்தோர், தொகுப்பித்தோர் தன்மை.
அகநானூறு – தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
தொகுத்தோன் - மதுரைஉப்பூரி கிழான் மகன் உருத்திரசன்மன்;.
குறுந்தொகை - தொகுப்பித்தோன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை
தொகுத்தோன் - புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.
கலித்தொகை - தொகுப்பித்தோன் பெயர் தெரியாது
தொகுத்தோன் நல்லந்துவனார்.
நற்றிணை - தொகுப்பித்தோன் பன்னாடு தந்த மாறன் வழுதி
தொகுத்தோன் பெயர் தெரியாது.
பதிற்றுப் பத்து இவற்றினைத் தொகுத்தோர் தொகுப்பி;தோர் தெரியாது. பதிற் றுப்பத்து முற்று முழுதாகச் சேரமன்னர் பற்றியதாதலால்
புறநானூறு சேர மன்னர் அனுசரணையுடன் தொகுக்கப்பட்டிருக்கலாம்.
ஏனையவற்றைத் தொகுப்பதிலும் மன்னர் ஆதரவு இருந்திருக்கும்
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை உத்தேசமாக கி.பி 210க்கும் 230க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்திருக்கலாம் என்பர்.
பன்னாடு தந்த மாறன் வழுதி உத்தேசம் கி.பி 215க்கு உரியவன் என் கொள்ளப்படுகிறான்.
இவ்வகையில் இத்தொகுப்பு கி.பி 2ம் நூற்றாண்டில் இடம் பெற்றது என்பது தெளிவாகின்றது.
தொகுப்பு நூல்களுக்கு அரசர்கள் ஆதரவு தருவதைக் இங்கு நாம் காணுகின்றோம்
தொகுத்தோர் கூட ஊர்க்கிழார், கிழான் மகன் என்று அழைக்கப்படுகின்றனர்.
கிழான் என்பது உரிமையுடையவர்கள.;
தொகுத்தோர் நிலக்கிழார்களாக இருந்திருக்கலாம்.
மருத நில நாகரிகம் வளர்ச்சியுற்ற போது நிலக்கிழார்கள் தோற்றம் பெறகிறார்கள.
; நிலக்கிழார்களிடமிருந்து அரசர்கள் உருவாகிறார்கள.
; தமிழ் நாட்டின் அரசுருவாக்கம் பற்றிய சில ஆய்வுகள் வந்துள்ளன.
இங்கு ஓர் அரசியல் முக்கியத்துவம் முதன்மைப்படுத்தப்படுகின்றது.
எழுத்தறிவு பரவாத - அரசு முளைவிடும் காலகட்டங்களில் அரசர்கட்கு பிரசாரம் புரிய புலவர்கள் தேவைப்பட்டனர்.
புலவர்கள் அரசர்களின் வமிசாவழியை நிலை நிறுத்தவும்,
மன்னனின் ஆட்சியை சட்ட அதிகார வன்மையுடையதாக்கவும்;,
அவன் நடத்திய போர்களை ஞாயப்படுத்தவும் வேண்டியிருந்தது.
இவ்வரசர்கள் தம் நாட்டு நிலத்தையும், நிலத்துக்குரித்தாளரான நிலக்கிழாரையும் தம் படை வலியால் பாதுகாத்தனர்.
இதனால் பண்டைய வீர இலக்கியப் பாடல்களுக்கு ஒரு நிகழ்கால அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
அரசின் நிலை பேற்றுக்குப் பண்டைய அரசர்கள் பண்டைய நிலக்கிழார்கள் அவர்கள் வாழ்க்கைகள்; அவசியமானவை.
எனவே தான் அரசு வளர்ச்சி காலத்தில் சங்க இலக்கியத் தொகுப்புகளை அரசர்கள் ஊக்குவித்திருக்கின்றனர்.
இப்படித் தொகுக்கப்படும் போது தொகுத்தோன் தொகுப்பித்தோனின்; சொந்த விருப்பு வெறுப்புகள் இடம் பெற்றிருக்கும்.
நிகழ்கால வாழ்வுக்கு, அரசுக்கு, அச்சுறுத்தல் தரும் - நிகழ்கால விழுமியங்கட்கு மாறானதாகக் கருதப்படும் - பல பாடல்கள் விடுபட்டிருக்க கூடிய வாய்ப்புண்டு.
தமது அரசு நிலை பேற்றுக்கும், தம் கொள்கைகட்கும் உகந்தனவற்றையே தொகுப்பித்தோர் தொகுத்திருப்பார்கள்
. ஏனைய எத்தனையோ பாடல்கள் இருந்திருக்கும். ஆனால் அவை தொகுக்கப்படவில்லை.
புறத்;திணைக்குரியவற்றுள் மூவேந்தருக்குரிய பாடல்களே முதனிலைப் படத் தொகுக்கப் பட்டிருப்பதனைப் புறநானூற்றின் அமைப்பிலிருந்தும் பதிற்றுப்பத்திலிருந்தும் கண்டுகொள்ளலாம் என்பர் பேராசிரியர் கா.சிவத்தம்பி.
இத்தொகுப்புகட்கும் வளர்ந்து வந்த எழுத்து வழக்குக்கும் தொடர்பிருத்தல் கூடும்.
எந்த மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இத் தொகுப்பினைச் செய்தனர் எனபதும் ஒரு முக்கிய வினாவாகும்.

இவ்வண்ணம் அரசின் வளர்ச்சிக் காலத்தில் –
நிலக்கிழார் வலிமை பெற்றவர்களாக உருவான காலத்தில் வணிகம், பெருகிய காலத்தில் –
ஆரியச் செல்வாக்கு ஏற்பட்ட காலத்தில் –
எழுத்து தமிழ் நாட்டிற்கு அறிமுகமான காலத்தில்
வளர்ந்து வந்த அதிகாரம் மிகுந்த அரசர்களும் நிலக்கிழார்களும் தம் அதிகாரத்தை நிலைநிறுத்த இத்தகைய தொகுப்புக்கள் அவசியம் எனக் கருதியிருக்க வேண்டும்.

இத்தொகுப்புகளை ஆதாரமாகக் கொண்டே பின் வந்த இலக்கணக்காரரும் அதற்கு உரை வகுத்த உரைகாரரும் சங்க இலக்கியம் பற்றிய கருத்துருவைப் பின்னாளில் உருவாக்கினார்கள்.
சங்ககால இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் ஆதாரமாகக் கொண்டு சங்க இலக்கியங்கள் பற்றி எழுந்த கருத்துருவம்
சங்க இலக்கியங்களின் தோற்றமும் தொகுப்பும் கி.பி 100க்கும் 250க்கும் இடையில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர்.
சங்க இலக்கியங்களை வைத்துக் கொண்டு ஒரு இலக்கியக் கோட்பாட்டைஅறிமுகம் செய்த தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொகுக்கப்பட்டு 250 வருடங்களின் பின் கி.பி 500 இல் தோன்றுகின்றது.
தொல்காப்பியர் தம்காலச் சிந்தனை முறைகளை வைத்தே சங்க இலக்கியங்களை வகுத்து இலக்கணமும் செய்தார்.
தொல்காப்பியத்திற்குப் பின்பு கி.பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த இளம்பூரணர் சங்க இலகக்pயம் தோன்றி 1000 வருடங்களுக்குப் பின்னர் தொல்காப்பியரை ஆதாரமாக வைத்து சங்க இலக்கியம் பற்றிய கருத்துருவம்; அமைத்தார்.
அதன்பின் வந்த நச்சினார்க்கினியர் சங்க இலக்கியம் தோன்றி 1600 வருடங்களின் பின் கி.பி 16ம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு எழுதிய உரை மூலம் இளம்பூரணரின் கருத்துருவத்தை மேலும் இறுக்கினார்.
19ம் நூற்றாண்டில் தமிழறிஞர்கள் சங்க இலக்கியம் பற்றிய ஒரு கருத்துருவத்தை உண்டாக்கி விடுகிறார்கள.;
இன்றுவரை அக்கருத்தே மேலாண்மை மிக்க கருத்தாக நிலவி வருகிறது
. அக்கருத்துக் கட்டமைவு சுருக்கமாகக் கீழே தரப்படுகிறது
.
சங்ககாலம், சங்க இலக்கியம் பற்றிய கட்டமைப்பு.
______________________________________________________
1. தமிழ் நாடு ஐந்து வகையான இயற்கைப் பிரிவுகளையுடையது. அவையாவன மலைப்பிரதேசம், காட்டுப்பிரதேசம், நீர்வளமும் நிலவளமுள்ள வயற்பிரதேசம,; கடற்கரைப்பிரதேசம், வறண்ட நிலப்பிரதேசம்.

2.இந்நிலங்களில் காணப்படும் தாவரங்களால் இந்நிலங்கள் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,; பாலை, எனப் பெயர் பெற்றன.
3. இந்நிலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்வு அக வாழ்வு புறவாழ்வு எனப் பிரிக்கப்பட்டிருந்தது. அகவாழ்வு பிராயமடைந்த ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே நடக்கும் காதல் ஒழுக்கமாகும் புறவாழ்வு இது தவிர்ந்த ஏனையவை. முக்கியமாக போரையே புறமென்றனர்.

4.ஐந்து நிலத்திற்கும், ஐந்து அகவாழ்வும், ஐந்து புறவாழ்வும் உண்டு ஐந்து நிலத்திலும் நடைபெறும் ஒழுக்கமே தூய காதல் ஒழுக்கம், (அன்பின் ஐந்திணை),
.
5. அகத்தினுள் வரும் கைக்கிளை பெருந்திணை என்பன தூய அகம் ஒழுக்கமன்று. அவை எல்லா நிலத்திற்கும் வரும்
6. ஐந்து நிலத்திற்கும் ஐந்து புறஒழுக்கம், உண்டு.
7.காஞ்சி, நிலயாமை, என்பன தூய புற ஒழுக்கமன்று. அவை எல்லா நிலத்திற்கும் வரும்
. கீழ்வரும் அட்டவணை இதனைக் காட்டுகிறது
.
அகப்புறத் திணைக்கட்டமைப்புப் பற்றிய அட்டவணை.
________________________________________________________

அகத்திணை
_______________
_________________________________________________________________
பூ பிரதேசம் பழக்கவழக்கம்
___________________________________________________________________
குறிஞ்சி மலைநாடு புணர்தல்
முல்லை காடு(மேய்ச்சலுக்குரியநிலம்) இருத்தல்
மருதம் வயல் (பண்படுத்தப்பட்ட நிலம் ) ஊடல்
நெய்தல் கடற்கரை பிரிதல் (இரங்கல்)
புhலை வரண்ட நிலம் பிரிதல்
கைக்கிளை - எல்லா நிலமும்
பெருந்திணை - ஒருதலைக் காதல்
பொருந்தாக்காதல்
அல்லது அளவு மீறிய காதல்


புறத்திணை
________________
________________________________________________________________
பூ பிரதேசம் பழக்கவழக்கம்
_______________________________________________________________
குறிஞ்சி மலைநாடு ஆநிரை கவர்தல்
முல்லை காடு (மேய்ச்சல்நிலம்) ஆநிரை காத்தல்
மருதம் வயல்(பண்படுத்தப்பட்ட நிலம்) கோட்டை பிடித்தல் (அரண் அமைத்துப் பேணல்)
நெய்தல் கடற்கரை களம் குறித்துப் போர் செய்தல்
பாலை வரண்ட நிலம் களவு எடுத்தல்

பாடாண் எல்லா நிலங்களும் ஆணைப் பாடுதல்
காஞ்சி எல்லா நிலங்களும் நிலையாமையைப் பாடுதல் .

தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்தை அடியொற்றியும் உரையாசிரியர்களின் கூற்றை அடியொற்றியும்
சங்ககாலத் தமிழர்
வாழ்க்கை,
தொழில் பண்பாடு
பற்றிய பின்வரும் கருத்துரையாடல்கள் தோன்றின
. மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)

No comments:

Post a Comment