சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர்- 3
__________________________________________________________________
பழங்கற்காலச் சின்னங்கள்.
புராதன இந்திய வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் றொபட்புறூஸ் பூட் என்ற மண்ணியியலாளர் 1863 இல் சென்னைக்கருகில் பலியோதிக்காலக் (பழங்கற்காலக்) கைக்கோடரி ஒன்றைக் கண்டெடுத்தார்
அவர் அதனைக் 2லட்சம் வருடங்களுக்கு முந்தியது. என்று கணிப்பிட்டார்.
பஞ்சாப்பின் சோன் பள்ளத்தாக்கிலிருந்த கற்கால மக்களை விட முன்னேறிய மக்களாக சென்னை மக்கள் இருந்திருக்க வேண்டும் என்று இவர் கருத்துரைத்தார்.
சோன் பள்ளத்தாக்கு மக்கள் தமது எதிரிகளைத் துரத்த மாத்திரமே கல்லை உபயோகித்திருந்தனர். என்றும் சென்னைப் பழம் மக்களோ ஒரு காரியத்திற்காகக் கல்லை மாற்றம் செய்துள்ளனர் ஆதலால் அவர்களைவிட இவர்கள் முன்னேறியவர்கள் என்பதும் இவர் கருத்து.
சென்னைக்கு வடக்கே கோட்டையர் (Kottaiyar) ஆற்றுப்படுக்கையில் பழங்கற்காலச் சின்னங்கள் சில கண்டெடுக்கப்பட்டன.
தென் சென்னையிலுள்ள அதிராம் பக்கத்தில் (அச்சிறுபாக்கம்) கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதன்படி பழங்கற்கால மனிதர் நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பவராக அன்றி அலைந்து திரிபவர்களாகவும் காய்கனிகள், மிருக இறைச்சி உண்டு வாழ்வராகவும் இருந்தனர்.
இக்காலமனிதர் எதனையும் உற்பத்தி செய்யவில்லை. சூழ என்ன உண்டோ அதனையே உணவாக உண்டு உயிர் வாழ்ந்தனர்.
இடைக்கற்காலச் சின்னங்கள்.
மெசோலிதிக்கால (இடைக்கற்காலம்) மனிதர்கள் வாழ்ந்த தடத்தினை இராமநாதபுரம், திருநெல்வேலிப் பகுதிகளிலும்
மதுரைக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் கண்டுபிடித்தனர்.
இங்கும் கற்காலத்திற்குரிய கைக்கோடரிகள் சில கண்டெடுக்கப்பட்டன.
இங்கு Agate,Jaspan போன்ற பல்வேறு கற்களினாலும் செய்யப்பட்ட பல கருவிகள் கிடைத்தனர்
இங்கு கற்களை ஈட்டி நுனி, கம்புநுனிகளுக்குப் பயன்படுத்திய சான்றுகள் கிடைத்துள்ளன.
இத்தடயங்கள் சில திருநெல்வேலிப் பகுதியிலுள்ள சோயபுரத்திலும் கிடைத்துள்ளன.
சென்னர் என்னும் ஆய்வாளர் இதனை கி.மு 4000 ஆண்டுக்குரியதெனக் கணிப்பிடுவர். (இத்தகைய கற்கருவிகள் தமிழ் நாட்டிற் பாவனையில் இருந்த காலத்தில் எகிப்தில் பிரமிட்டுக்களைக்கட்டும் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.)
புதியகற்காலச் சின்னங்கள்.
நியோதிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) வேகமான வளர்ச்சி மனிதர் கையாண்ட கருவிகளில் ஏற்பட்டுள்ளது.
இது மனிதரின் வாழ்க்கை முறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இக்காலத்தில் மனிதர் மந்தைகளைப் பழக்க ஆரம்பித்திருந்தனர்.
தானியங்களை, பூண்டுகளை நாட்டி அதிலிருந்து பயன்பெறும் முறையை அறிய ஆரம்பித்திருந்தனர்.
விவசாயத்தின் ஆரம்ப நிலையில் இம்மக்கள் இருந்தனர்.
நெருப்பைக் கண்டுபிடித்து உபயோகிக்கத் தொடங்கியதும் இக்காலத்திலே தான் எனலாம்.
இந்நாகரிகம் உருவான பகுதியினையும் கருவிகளையும் புறூஸ் பூட்டே கண்டுபிடித்தார்.
மிகவும் செம்மைப்படுத்தப்பட்ட
கைக்கோடரி
, சுத்தியல்,
ஆகிய கருவிகளை சேலம் பகுதியிலுள்ள சிவோரி (Shevory) மலைப்பகுதியில் இவர் கண்டெடுத்தார்.
வட ஆர்க்காட்டுப் பகுதியில் திருந்திய நிலையிலிருந்த மண்வெட்டிகளை னுசு.S.R. ராவ் கண்டெடுத்தார்.
மட்பாண்டமும் இங்கு கண்டெடுக்கப்பட்டது.
மட்பாண்டம் பொருளாதார வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிப்பது. சேமிப்பின் அடையாளம் அது.
விவசாயத்தாலும் கால்நடை வளர்ப்பாலும் ஏற்பட்ட உபரி சேகரிக்கப்படும் பாத்திரம் அது
.
புதியகற்கால மட்பாண்டத் தயாரிப்பு.
நியோதிலிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) இரண்டு விதமான தொழிற்சாலைகளும்( Factories) தொழிலுற்பத்தியும் (Industry) இருந்தன என ஆய்வாளர் கூறினர்.
(தொழிற்சாலை, தொழிலுற்பத்தி என்பதனை இன்றைய அர்த்தத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது) அவையாவன.
1. பானை தயாரிக்கும் தொழிலும் தொழிற்சாலையும்
2. கருவிகள் தயாரிக்கும் தொழிலும் தொழிற்சாலையும்.
சிவப்பு, கறுப்பு, பிறவுண், நிறங்களில் வித்தியாசமான மட்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டன.
அந்த மட்பாண்டங்களில் சிறிதளவு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.
இம்மட்பாண்டங்கள் கைகளினாலேயே செய்யப்பட்டிருந்தன.
(சக்கரம் போன்ற கருவி பாவிக்கப்படவில்லை.)
புதியகற்காலத் (நியோலிதிக்காலத்) தமிழர் 18 விதமான முறையில் 67 வகையான மட்பாண்டங்களைத் தயாரித்திருந்தனர் எனத் தொல்பொருளியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பலவகையான மட்பாண்டக் கருவிகளுக்கும் அப்பால் பல வகையான கைக்கருவிகளையும் நியோலிதிக் காலத் தமிழர் உற்பத்தி செய்தனர். எனத் தொல்பொருளியலாளர் கண்டு பிடித்துள்ளனர்.
கோடரிகள்,
சுற்றியல்கள்
கூர்மையான ஆயுதங்கள்,
என்பன இவற்றுட் சில
இவை யாவும் நியோலிதிக் கால மக்கள் பெற்ற வளர்ச்சியைக் காட்டுகின்றன.
பலியோலிதிக் காலத்தில் (பழங்கற்காலத்தில்) உணவு தேடி வாழ்ந்த தமிழர் மெசோலிதிக் காலத்தில் (இடைக்காலத்தில்) உணவைச் சேகரிக்கத் தொடங்கி நியோலிதிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.
உணவு தேடுதல், வேட்டையாடும் காலம் (Food Hunting)
உணவைச் சேகரித்தல் உணவு சேகரிக்கும் காலம் (Food gathering stage)
இது சற்று வளர்ச்சி பெற்ற காலமாகும்
. உணவை உற்பத்தி செய்தல் (Food productionj) இன்னும் வளர்சசி பெற்ற காலமாகும்.
வேட்டையாடும் காலத்திலிருந்து
உணவு உற்பத்தி செய்யும் காலத்திற்கு
புராதன தமிழர் உடனே வந்து விடவில்லை.
இடைக் காலத்தில் அவர்கள் செய்த
மந்தை மேய்ப்பு,
வீட்டுப் பிராணிகளை (ஆடு, மாடு, கோழி, பன்றி என்பனவற்றை) உணவுக்காகவும் வேலை செய்வதற்காகவும் வளர்த்தல்
இவற்றைப் பாதுகாக்க நாயை வளர்த்தல்
என்பனவெல்லாம்
வேட்டையாடும் காலத்திலிருந்து உணவு உற்பத்தி வரை மனித குலம் தாம் வளர எடுத்த முயற்சிகளாகும்.
உணவு உற்பத்தி செய்யத் தொடங்கிய பின்னரேயே புராதன தமிழர் முன்னேற்றத்தின் முதற்படியில் கால்வைக்கின்றனர்.
ஆரம்பத்தில் புராதன தமிழர் சமவெளியில் விவசாய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
மேட்டுப் பாங்கான பகுதிகளிலேயே மேற் கொண்டனர். எனத் தொல்லியலாய்வாளர் கூறுகின்றனர்.
இந்த நியோலிதிக் காலத்திலேதான் தமிழ்நாட்டுக்கு இரும்பு அறிமுகமாகின்றது.
நியோலிதிக் காலத்தின் தனித்துவமும் இதுவே.
தமிழ் நாட்டின் சிந்துவெளி நாகரிகம் போல செம்புக்காலம் இருக்கவில்லை
. புதிய கற்காலத்தையடுத்து நேராக இரும்புக் காலத்துக்குள் தமிழ் நாடு சென்று விடுகிறது
.
இந்நியோலிதிக் காலம் மிக நீண்ட காலம் நிலவியது என்பர்
தொல்வியலாளர்கள் கி.மு3000லிருந்து கி.மு 1000 இன் நடுப்பகுதி வரை (ஏறத்தாழ 2500 வருடங்கள்) இக்காலம் நிலவியது என்பர்.
இந்நியோலிதிக் காலத்தைத் தொல்லியலாளர்கள் மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளனர்.
1. கி.மு 2800 – 200
2. கி.மு 2000 – 1800
3. கி.மு 1800 - 500
நியோலிதிக்கின் மூன்றாவது காலகட்டத்திலே தான் உலோகத் தொழினுட்பத்தில் முக்கியமான வளர்ச்சிகள் ஏற்பட்டன.
இக்காலகட்டத்திலே தான் இலக்கியங்கள் எழுந்தன
. எழுத்து வடிவம் கண்டு பிடிக்கப்பட்டது.
பலியோதிக்,
மெசோலிதிக்
, நியோலிதிக்,
இம்மூன்று காலகட்டங்களிலும்
தமிழ் நாட்டில் வாழ்ந்த மனிதர்கள் யாவர்?
மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர்- 3
__________________________________________________________________
பழங்கற்காலச் சின்னங்கள்.
புராதன இந்திய வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் றொபட்புறூஸ் பூட் என்ற மண்ணியியலாளர் 1863 இல் சென்னைக்கருகில் பலியோதிக்காலக் (பழங்கற்காலக்) கைக்கோடரி ஒன்றைக் கண்டெடுத்தார்
அவர் அதனைக் 2லட்சம் வருடங்களுக்கு முந்தியது. என்று கணிப்பிட்டார்.
பஞ்சாப்பின் சோன் பள்ளத்தாக்கிலிருந்த கற்கால மக்களை விட முன்னேறிய மக்களாக சென்னை மக்கள் இருந்திருக்க வேண்டும் என்று இவர் கருத்துரைத்தார்.
சோன் பள்ளத்தாக்கு மக்கள் தமது எதிரிகளைத் துரத்த மாத்திரமே கல்லை உபயோகித்திருந்தனர். என்றும் சென்னைப் பழம் மக்களோ ஒரு காரியத்திற்காகக் கல்லை மாற்றம் செய்துள்ளனர் ஆதலால் அவர்களைவிட இவர்கள் முன்னேறியவர்கள் என்பதும் இவர் கருத்து.
சென்னைக்கு வடக்கே கோட்டையர் (Kottaiyar) ஆற்றுப்படுக்கையில் பழங்கற்காலச் சின்னங்கள் சில கண்டெடுக்கப்பட்டன.
தென் சென்னையிலுள்ள அதிராம் பக்கத்தில் (அச்சிறுபாக்கம்) கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதன்படி பழங்கற்கால மனிதர் நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பவராக அன்றி அலைந்து திரிபவர்களாகவும் காய்கனிகள், மிருக இறைச்சி உண்டு வாழ்வராகவும் இருந்தனர்.
இக்காலமனிதர் எதனையும் உற்பத்தி செய்யவில்லை. சூழ என்ன உண்டோ அதனையே உணவாக உண்டு உயிர் வாழ்ந்தனர்.
இடைக்கற்காலச் சின்னங்கள்.
மெசோலிதிக்கால (இடைக்கற்காலம்) மனிதர்கள் வாழ்ந்த தடத்தினை இராமநாதபுரம், திருநெல்வேலிப் பகுதிகளிலும்
மதுரைக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் கண்டுபிடித்தனர்.
இங்கும் கற்காலத்திற்குரிய கைக்கோடரிகள் சில கண்டெடுக்கப்பட்டன.
இங்கு Agate,Jaspan போன்ற பல்வேறு கற்களினாலும் செய்யப்பட்ட பல கருவிகள் கிடைத்தனர்
இங்கு கற்களை ஈட்டி நுனி, கம்புநுனிகளுக்குப் பயன்படுத்திய சான்றுகள் கிடைத்துள்ளன.
இத்தடயங்கள் சில திருநெல்வேலிப் பகுதியிலுள்ள சோயபுரத்திலும் கிடைத்துள்ளன.
சென்னர் என்னும் ஆய்வாளர் இதனை கி.மு 4000 ஆண்டுக்குரியதெனக் கணிப்பிடுவர். (இத்தகைய கற்கருவிகள் தமிழ் நாட்டிற் பாவனையில் இருந்த காலத்தில் எகிப்தில் பிரமிட்டுக்களைக்கட்டும் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.)
புதியகற்காலச் சின்னங்கள்.
நியோதிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) வேகமான வளர்ச்சி மனிதர் கையாண்ட கருவிகளில் ஏற்பட்டுள்ளது.
இது மனிதரின் வாழ்க்கை முறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இக்காலத்தில் மனிதர் மந்தைகளைப் பழக்க ஆரம்பித்திருந்தனர்.
தானியங்களை, பூண்டுகளை நாட்டி அதிலிருந்து பயன்பெறும் முறையை அறிய ஆரம்பித்திருந்தனர்.
விவசாயத்தின் ஆரம்ப நிலையில் இம்மக்கள் இருந்தனர்.
நெருப்பைக் கண்டுபிடித்து உபயோகிக்கத் தொடங்கியதும் இக்காலத்திலே தான் எனலாம்.
இந்நாகரிகம் உருவான பகுதியினையும் கருவிகளையும் புறூஸ் பூட்டே கண்டுபிடித்தார்.
மிகவும் செம்மைப்படுத்தப்பட்ட
கைக்கோடரி
, சுத்தியல்,
ஆகிய கருவிகளை சேலம் பகுதியிலுள்ள சிவோரி (Shevory) மலைப்பகுதியில் இவர் கண்டெடுத்தார்.
வட ஆர்க்காட்டுப் பகுதியில் திருந்திய நிலையிலிருந்த மண்வெட்டிகளை னுசு.S.R. ராவ் கண்டெடுத்தார்.
மட்பாண்டமும் இங்கு கண்டெடுக்கப்பட்டது.
மட்பாண்டம் பொருளாதார வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிப்பது. சேமிப்பின் அடையாளம் அது.
விவசாயத்தாலும் கால்நடை வளர்ப்பாலும் ஏற்பட்ட உபரி சேகரிக்கப்படும் பாத்திரம் அது
.
புதியகற்கால மட்பாண்டத் தயாரிப்பு.
நியோதிலிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) இரண்டு விதமான தொழிற்சாலைகளும்( Factories) தொழிலுற்பத்தியும் (Industry) இருந்தன என ஆய்வாளர் கூறினர்.
(தொழிற்சாலை, தொழிலுற்பத்தி என்பதனை இன்றைய அர்த்தத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது) அவையாவன.
1. பானை தயாரிக்கும் தொழிலும் தொழிற்சாலையும்
2. கருவிகள் தயாரிக்கும் தொழிலும் தொழிற்சாலையும்.
சிவப்பு, கறுப்பு, பிறவுண், நிறங்களில் வித்தியாசமான மட்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டன.
அந்த மட்பாண்டங்களில் சிறிதளவு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.
இம்மட்பாண்டங்கள் கைகளினாலேயே செய்யப்பட்டிருந்தன.
(சக்கரம் போன்ற கருவி பாவிக்கப்படவில்லை.)
புதியகற்காலத் (நியோலிதிக்காலத்) தமிழர் 18 விதமான முறையில் 67 வகையான மட்பாண்டங்களைத் தயாரித்திருந்தனர் எனத் தொல்பொருளியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பலவகையான மட்பாண்டக் கருவிகளுக்கும் அப்பால் பல வகையான கைக்கருவிகளையும் நியோலிதிக் காலத் தமிழர் உற்பத்தி செய்தனர். எனத் தொல்பொருளியலாளர் கண்டு பிடித்துள்ளனர்.
கோடரிகள்,
சுற்றியல்கள்
கூர்மையான ஆயுதங்கள்,
என்பன இவற்றுட் சில
இவை யாவும் நியோலிதிக் கால மக்கள் பெற்ற வளர்ச்சியைக் காட்டுகின்றன.
பலியோலிதிக் காலத்தில் (பழங்கற்காலத்தில்) உணவு தேடி வாழ்ந்த தமிழர் மெசோலிதிக் காலத்தில் (இடைக்காலத்தில்) உணவைச் சேகரிக்கத் தொடங்கி நியோலிதிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.
உணவு தேடுதல், வேட்டையாடும் காலம் (Food Hunting)
உணவைச் சேகரித்தல் உணவு சேகரிக்கும் காலம் (Food gathering stage)
இது சற்று வளர்ச்சி பெற்ற காலமாகும்
. உணவை உற்பத்தி செய்தல் (Food productionj) இன்னும் வளர்சசி பெற்ற காலமாகும்.
வேட்டையாடும் காலத்திலிருந்து
உணவு உற்பத்தி செய்யும் காலத்திற்கு
புராதன தமிழர் உடனே வந்து விடவில்லை.
இடைக் காலத்தில் அவர்கள் செய்த
மந்தை மேய்ப்பு,
வீட்டுப் பிராணிகளை (ஆடு, மாடு, கோழி, பன்றி என்பனவற்றை) உணவுக்காகவும் வேலை செய்வதற்காகவும் வளர்த்தல்
இவற்றைப் பாதுகாக்க நாயை வளர்த்தல்
என்பனவெல்லாம்
வேட்டையாடும் காலத்திலிருந்து உணவு உற்பத்தி வரை மனித குலம் தாம் வளர எடுத்த முயற்சிகளாகும்.
உணவு உற்பத்தி செய்யத் தொடங்கிய பின்னரேயே புராதன தமிழர் முன்னேற்றத்தின் முதற்படியில் கால்வைக்கின்றனர்.
ஆரம்பத்தில் புராதன தமிழர் சமவெளியில் விவசாய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
மேட்டுப் பாங்கான பகுதிகளிலேயே மேற் கொண்டனர். எனத் தொல்லியலாய்வாளர் கூறுகின்றனர்.
இந்த நியோலிதிக் காலத்திலேதான் தமிழ்நாட்டுக்கு இரும்பு அறிமுகமாகின்றது.
நியோலிதிக் காலத்தின் தனித்துவமும் இதுவே.
தமிழ் நாட்டின் சிந்துவெளி நாகரிகம் போல செம்புக்காலம் இருக்கவில்லை
. புதிய கற்காலத்தையடுத்து நேராக இரும்புக் காலத்துக்குள் தமிழ் நாடு சென்று விடுகிறது
.
இந்நியோலிதிக் காலம் மிக நீண்ட காலம் நிலவியது என்பர்
தொல்வியலாளர்கள் கி.மு3000லிருந்து கி.மு 1000 இன் நடுப்பகுதி வரை (ஏறத்தாழ 2500 வருடங்கள்) இக்காலம் நிலவியது என்பர்.
இந்நியோலிதிக் காலத்தைத் தொல்லியலாளர்கள் மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளனர்.
1. கி.மு 2800 – 200
2. கி.மு 2000 – 1800
3. கி.மு 1800 - 500
நியோலிதிக்கின் மூன்றாவது காலகட்டத்திலே தான் உலோகத் தொழினுட்பத்தில் முக்கியமான வளர்ச்சிகள் ஏற்பட்டன.
இக்காலகட்டத்திலே தான் இலக்கியங்கள் எழுந்தன
. எழுத்து வடிவம் கண்டு பிடிக்கப்பட்டது.
பலியோதிக்,
மெசோலிதிக்
, நியோலிதிக்,
இம்மூன்று காலகட்டங்களிலும்
தமிழ் நாட்டில் வாழ்ந்த மனிதர்கள் யாவர்?
மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)
No comments:
Post a Comment