Tuesday 21 April 2015

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 5

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் -5
________________________________________________________
மௌனகுரு
சோழ அதிகாரம் அதாவது சோழர் காலத்தில் அரச அதிகாரம் மையப்படுத்தப்பட்டதா? கூறுபடுத்தப்பட்டதா? என்பது மிகவும் முக்கியமானதொரு விவாதமாகும்
. மையப்படுத்தப்பட்டதென்றே அறிஞர்கள் தமது வாதங்களை முன்வைத்த போதும் அதன் கூறுபடுத்தப்பட்ட தன்மையினையும் கல்வெட்டுக்கள் மூலமாகவும் இலக்கியங்கள் மூலமாகவும் நாங்கள் அறிய முடிகிறது.
ஆய்வாளர் கேசவன் அவர்கள் இந்த இரண்டு கூற்றுக்களுக்குமிடையில் ஒரு மூன்றாவது ஞாயம் ஒன்றினை வைப்பார்.
அவர், சோழர் காலத்தில் இருந்த அரச அதிகாரம் மையப்படுத்தப்பட்டும் இருந்தது, கூறுபடுத்தப்பட்டும் இருந்தது. இரண்டிற்கும் ஆதாரங்கள் உண்டு என்று கூறி அதனை அவர் பின்வருமாறு கூறுவார்.
கேசவன் அவர்கள் சோழர் காலத்தினை மூன்று காலமாகப் பிரிப்பா.;
1. எழுச்சிக்காலம் - கி.பி- 850 – 985 வரையுள்ள 185 வருட காலம்
2. வளர்ச்சிக் காலம் - கி.பி - 985 – 1160 வரையுள்ள 175 வருட காலம்
3. பின்னடைவுக் காலம் - கி.பி –1160 –1260 வரையுள்ள 100 வருடங்கள்
எழுச்சிக்காலம்
எழுச்சிக் காலத்திலேதான் விஜயாலய சோழன், பராந்தகச் சோழன் போன்றவர்கள் பல்லவர் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர சோழ அரசை நிறுவி, தொண்டை மண்டலம் , பாண்டி மண்டலத்தினை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்த எடுத்த முயற்சிக்காலம் இதுதான.;
வளர்ச்சிக் காலம்
வளர்ச்சிக்காலம் 1ம் ராஜராஜசோழன் , ராஜேந்திரசோழன், குலோத்துங்கன், போன்ற புகழ் பெற்ற மன்னர்கள் தமிழகத்தினையும் தாண்டி நாடுகளைக் கைப்பற்றி சோழப்பேரரசை விஸ்தரித்த உச்சக்கட்டக் காலம் எனலாம்.
. பின்னடைவுக் காலம்
பின்னடைவுக் காலம் 2ம் ராஜராஜசோழன் 2ம் குலத்துங்கசோழன் போன்ற வலிமையற்ற மன்னர்கள் ஆண்டகாலம். இந்தக் காலத்தில் சோழப் பேரசு வீழத் தொடங்கியிருந்தது. பல மண்டலாதிபதிகளும், குறுநில மன்னர்களும் தத்தம் பிரதேசங்களை மீண்டும் தமக்குள் சுதந்திரமாக உருவாக்கத் தொடங்கிய காலம் இது எனலாம்.
பேர்ட்றன் ஸ்ரைன் அவர்கள்
இரட்டை அரசிறமைக் கோட்பாடு
என்கின்ற சொல்லினைப் பாவித்தார்.
அதாவது மையத்திலும் அரசிறமை இருந்தது.
சுற்றியிருந்த இடைநிலையிலும் அரசிறமை இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் அந்தப் பகுதியினையும் ஆண்ட மண்டலாதிபதிகளிடமும் அரசிறமை இருந்தது
. இரண்டு வகையான அரசிறமை இருந்ததினை
இரட்டை அரசிறமைக் கோட்பாடு என்பர்.
பேர்டன் ஸ்ரைன் கூறுவதைப் போல இரட்டை அரசிறமைக் கோட்பாடு என்பது இந்த ஆரம்ப காலத்திற்கும் பின்னடைவுக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கின்றதென்று கேசவன் கூறுவார். அதாவது ஒரு அரசு ஆரம்பமாகித் தன்னுடைய அரசு அதிகாரத்தினை நிலைநிறுத்தத் தொடங்கிய காலத்தில் மையத்தில் அரசிறமை இருந்திருக்கும். ஏனைய இடங்களில் மற்றவைகளின் அரசிறமை இருந்திருக்கும். இரட்டை அரசிறமை இருப்பதற்கு அந்தக் காலம் உகந்தது.
பின்னடைவுக் காலத்திலும் இதே நிலமை இருந்திருக்கலாம். அதாவது மையத்தில் சோழப்பேரரசு பலம் இழந்த போது இடைநிலையிலும் விளிம்பிலும் இருந்தவர்கள் தங்களது அரச அதிகாரத்தினை அங்கு வைத்திருக்கலாம். அங்கும் இரட்டை அரசிறமை இருந்திருக்கலாம்.
வளர்ச்சிக் காலத்தில் இரட்டை அரசுரிமை இருக்க ஞாயமில்லை.
ஏனென்று சொன்னால் மிகுந்த படைப்பலத்தடன் சோழ மன்னர்கள் ஆண்டமையினால் மையத்திலே இருந்த அரசுரிமை, அரச அதிகாரம் இடைநிலையினையும் ஆளக்கூடிய அளவிற்கு வலிமையாக இருந்தமையினால் மகாலிங்கம் அப்பாத்துரை நொபுறு கரோசிமா கூறிய அந்த உரிமைத் தன்மை கொண்ட மையமாக்கப்பட்ட அரதிகாரம் இக்காலத்திலே தான் இருந்திருக்கலாம் என்று கேசவன் விளக்குவார்.
கேசவன் கூறுவதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாம்
ஏனென்றால் இந்த வலிமையான எழுச்சிக் காலத்திலே தான் புதிய நில அறிமுகம் புதிய பாசன வசதிகளுக்கு திட்டமிடுதல் என்பன நடைபெற்றிருக்கின்றன.
இங்கு மனித முயற்சி தேவைப்பட்டது
. புதிய நிலங்களை வெட்டி, ஒழுங்குபடுத்தி விவசாயம் பண்ணவும் பாசன வசதிகளை ஏற்படுத்தவும் இங்கு மனித முயற்சி தேவைப்பட்டது.
இடைநிலையிலும் விளிம்புக் கூர்களிலும் உள்ள நதிகளின் தீரமில்லாத நீர்ப்பாசன வசதி குறைந்த பகுதிகளிலுள்ள மனித முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியிருந்தது
. அங்குள்ள மக்களை இந்த நீர்ப்பாசனம், வயல் வேலைகளுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது.
இந்த வகையில் அந்தந்த நிலங்களிலுள்ள அதிகாரங்களையும் இணைத்துக் கொண்டு தான் இந்த சோழ அரசை ஆரம்பத்தில் வளர்க்க வேண்டியிருந்தது.
ஆனால் வளர்ச்சிக் காலத்திலே இவையெல்லாம் ஊடறுத்து உற்பத்தியில் கூடுதலான பங்கை வலிந்து கோருவதற்கான அதிகாரத்துவம் செயற்பட வேண்டியிருந்தது
. ஆரம்பகாலத்தில் அதாவது வளர்ச்சிக் காலத்தில் அத்திவாரத்தினையிட்டு
விளைநிலங்களை ஏற்படுத்தி,
விளைநிலங்களை உருவாக்கி,
உற்பத்தியினை உருவாக்கிய பின்னர் இந்த உற்பத்தியிலிருந்து பெறுகின்ற உபரியை வரியாகப் பெறுவதற்கு
அல்லது வேறு வகையில் பெறுவதற்கு
ஒரு பலம் வாய்ந்த அதிகாரம் தேவைப்பட்டது.
இந்த நேரத்திலே தான் வளர்ச்சி பெற்ற சோழப் பேரரசு தன்னுடைய படை வலிமையினால் ஒருமைத் தன்மை கொண்ட அரசதிகாரத்தினை நிறுவி உற்பத்தியில் கூடுதலான பங்கினை வலிந்து மக்களிடம் அல்லது மண்டலாதிபதிகளிடம் கோரத் தொடங்கியது.
பின்னடைவுக் காலத்திலே மனித அடிமைகள் உருவாக்கப்பட்டதும் அதற்கான கருத்தியலை வழங்கும் கலை,இலக்கியம்,சமய கலாசார முயற்சிகள் பெருவாரியாகவும் இக்காலகட்டத்திற்தான் நடந்திருக்க வேண்டும்.
உற்பத்தி சாதனங்களின் பெருக்கமின்மை காரணமாகவும்,
தொழிநுட்பத்தின் தேக்கம் ஏற்பட்டதன் காரணமாகவும்,
சமூக உபரியை உற்பத்தித் துறை அல்லாதவற்றில் முதலீடு; செய்தல் காரணமாகவும்
மக்களின் கலவரங்கள் காரணமாகவும்
வலங்கை, இடங்கைப் போர் சாதிப்போர் காரணமாகவும்,
இந்த மையத்திலிருந்த அதிகாரம் குறைந்து அந்தந்தப் பிரதேசத்தில் தலைவர்கள் அதிகாரம் செலுத்தத் தொடங்கிய போது சோழப் பேரரசின் அதிகாரம் என்பது சடங்காசாரமாக பேணப்பட்டது.
இறுதியிலே பாண்டியர்கள் 12ம் நூற்றாண்டின் பின் தலையெடுத்த போது மையப்பகுதியின் அரசிறமை இறுதியில் பாண்டியர்களால் தகர்க்கப்ட்டது.
இத்தகைய ஒரு அரச அதிகாரக் கட்டமைப்பைத்தான் தான் பேர்டன் ஸ்றைன் அவர்களும் நொபுறு கரோசிமா அவர்களும் கேசவன் அவர்களும் எங்கள் முன் வைக்கிறார்கள்.
(நாளை தொடரும்)

No comments:

Post a Comment