Tuesday 21 April 2015

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 5

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை-
கட்டுரைத் தொடர்- 5
________________________________________________________ மௌனகுரு
திராவிடரின் வளர்ச்சி.
________________________
நீர்ப்பாசனம், மிகுந்த வளமுள்ள பகுதிகளில் நிலையாக வாழத் தொடங்கிய திராவிடர் பொருளாதார வளம் பெற்று உயர்ந்தோராகவும்,
விளிம்புகளில் நீர்ப்பாசன வளம் குறைந்த பகுதிகளில் வாழ்ந்தோர் வசதி வாய்ப்புகளில் அவர்கட்கு அடுத்த படியிலும்
இவர்கட்கு அப்பால் தனித்து வாழ்ந்தோர் கீழ்ப்படியிலும் கணிக்கப்பட்டனர்
. இவர்களுக்கிடையே ஓயாத போர்கள் நிகழ்ந்தன.
வெட்சி, வஞ்சி உழிஞைப் போர்கள் இவற்றின் பழைய நினைவுகளையே குறிக்கின்றன.
தமிழ் நாட்டுக்கு இவ்வண்ணம் வந்த திராவிடர்கள் மத்திய தரைக்கடல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும்
மொசப்பதேமிச நாகரிகம,; பேர்சிய நாகரிகத்துடன் தொடர்புடையவர்கள் என்பதும் பலர் முடிவு.
திராவிடரின் வழிபாடான மலையி;ல் முருகனை வணங்கும் வணக்கத்தை சுமேரியாவில் மலைக் கோயில் வணக்கத்துடன் தொடர்பு படுத்துவர்.
அங்கு காணப்பட்ட ஊர் எனும் சொல் தமிழிலும் ஊர் என வழக்கிலுள்ளதுடன் அதே அர்த்தத்தைத் தருவதையும் சுட்டிக் காட்டுவர்.
அங்கு நிலவிய மலைப் பெண் தெய்வ வணக்கமே தமிழர் மத்தியில் தாய்த் தெய்வ வணக்கமாக வந்தது என்பர்.
தமிழர் மத்தியில் வந்த கோயில் தேவதாசி முறையை அக்கோயில் முறையுடன் ஒப்பிடுவர்.
இவ்வண்ணம் சுமேரியருக்கும் திராவிடருக்கும் ஒற்றுமைகளை எடுத்துக் காட்டி இத் திராவிடர் மத்திய தரைக் கடலில் இருந்து இந்தியா வந்தவர் என நிறுவுவர்.
திராவிடரின் தமி;ழ் நாட்டு வருகை
________________________________________
1. தரைவழியாகவும்
2. கடல் வழியாகவும்
நடந்தேறியது.
தரை வழியாக வந்தோர்
ஆப்கானிஸ்தான்,
பாக்கிஸ்தான்
சிந்துவெளி,
மேற்கு இந்தியாவுக்கூடாக
தென்னிந்தியாவுக்கு வந்து
அங்கு,
மலையாளத்தார்
ஆந்திரர், என நான்கு வகை திராவிட மொழி பேசும் இனங்களாகப் பிரிந்தனர் என்பது தரை வழிக் தமிழர் தெலுங்கர் கொள்கையினர் கருத்து.
திராவிடர் மத்தியதரைக்கடலில் இருந்து கப்பலில் நேரடியாக தென்னிந்தியா நோக்கி வந்து தமிழ் நாட்டில் தம் நாகரிகம் பரப்பினர் என்பது கடல் வழிக் கொள்கையினர் கருத்து
.
இவை இரண்டும் நிகழ்ந்தன என்பதும் சிலர் முடிவு.
திராவிட இனத்தினர் மேய்ச்சல் நிலப்பகுதிகளில் குடியேறி நீர்ப்பாசனம் செய்து உபரி கண்டு மென்மேலும் நாகரிகம் பெற்ற காலத்திலே தான் வடநாட்டுத் தொடர்பும் றோம கிரேக்க தொடர்புகளும் இவர்கட்கு எற்பட்டன.
அரிக்கமேட்டு அகழ்வாராய்வுச் சின்னங்கள்.
அரிக்கமேட்டில் நடந்த அகழ்வாராய்வுகள் இதற்குச் சான்று பகருகின்றன.
அரிக்க மேட்டில் குளத்தூர், ஆலக்கரை திருக்கம்பிளியூர் எனும் இடங்களில் சிவப்பு, கறுப்பு, மட்பாண்டங்கள் கிடைக்கின்றன
. இவை றோமர் பாவித்த மட்பாண்டங்கள் என ஆய்வாளர் கூறுகின்றனர்.
தமிழ் பிராஹ்மிக்கல்வெட்டுக்கள் இங்கு கிடைக்கின்றன.
எழுத்து வளர்ச்சி தமிழில் ஆரம்பித்தமைக்கு இது சான்று.
சமண பௌத்தர்களின் வருகை இக்காலத்தில் தான் நடைபெற்றிருக்கும்.
நகரங்கள் தோற்றம் பெற்ற காலமும் இதுவே
. நகரம் வியாபாரிகளால் உருவாவது.
இதனால் ஒரு வர்த்தக சமூகம் உருவாயிருக்க வேண்டும.;
பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சியில் நகரத்தையும் வர்த்தக சமூகத்தையும் பற்றிய செய்திகளைக் காணுகிறோம்.
கலித்தொகை பரிபாடலிலும் நகரங்களின் சிறப்பு பேசப்படுகிறது.
கரூர்தாலுகா
, ஆறு நாட்டார் மலை
ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பிராஹ்மி கல்வெட்டுக்கள் பற்றி மகாதேவன், மயிலை சீனிவேங்கடசாமி, சு. நாகசாமி, பன்னீர்;ச் செல்வம் ஆகிய தொல்பொருளாளர் ஆராய்ந்துள்ளனர்.
எழுத்துக்கலை இக்காலத்தில் தோன்றி விட்டது என்றும், தமிழ் ஒரு எழுத்து மொழியான காலம் இக்காலம் எனவும் இவர்கள் கூறினர்.
கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு இவ்வெழுத்துக்கள் உரியன என நிறுவிய இவர்கள் தமிழ், பிராமியைத் தழுவி உருவாயிற்று என்றும் கூறினர்.
முதல் இரண்டாம் நூற்றாண்டுகள் பரிசோதனை நிலையிலிருந்த இவ்வெழுத்துக்கள் பின்னர் நிறுவப்பட்டு ஏற்கப்பட்டு விட்டன என்பர் இவர்.
இக்காலத்திலே தான் வாய்மொழியில் இருந்த பண்டைய இலக்கியங்கள் எழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் இக்காலத்தில் இருவகை இலக்கியங்கள் எழுந்தன.
1. பழைய வாய்மொழிப் பாடல்கள் எழுத்தில் எழுப்பட்டன.
2. புதிதாகவும் பல பாடல்கள் எழுதப்பட்டன.
பாணர் - புலவர் என்ற பேதம் ஏற்படுகிறது.
பாணர் என்போர் கல்வி அறிவற்றோர் - பாட்டுப்பாடுபவர்- தலைவர்களைப் புகழ்வோர்
; புலவர் என்போர் அறிவாளிகள். செந்நாப்புலவர் என்ற சொற்பிரயோகம் உருவானது
. அறிவாளிகளே சான்றோர் என அழைக்கப்பட்டனர்.
காவிரிப்பூம் பட்டின அகழ்வு ஆராய்வுச் சின்னங்கள்.
__________________________________________________
காவிரிப்பூம் பட்டினத்தில் நடைபெற்ற அகழ்வாய்வு மேலும் பல புதிய தகவல்களைத் தந்தது. அங்கு பின் வரும் புதை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
1. சிவப்பு – கறுப்பு மட்பாண்டம்
2. வட்டக்கிணறுகள்.
3. றோமனிய நாணயங்கள்.
4. பலவகைப்பட்ட அழகான சுடுமண் சிற்பங்கள்
5. செங்கல்லால் கட்டப்பட்ட அணைக்கட்டுக்கள். (கீழையூரில்)
6. நீர் வளங்கள் (வானகிரியில்);.
7. பாதி பெறுமதியான ரத்தினக் கற்கள்.
8. மூன்று புத்த மடலாயங்கள்.
காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள வெள்ளையன் இருப்பு (Roman colony)
எனும் இடமும்,
மேற் குறிப்பிட்ட புதை பொருள் சின்னங்களும்
காவிரிபூம்பட்டினம் பிறநாட்டார் குடியிருப்புக்களைக் கொண்ட, வர்த்தகம் இடம் பெற்ற, நகரமயமாகிய ஒரு கலாசார மத்தியஸ்தானம் (Cultural centre)என்பதற்கான சான்றுகளாகும்.
அகம் 110,181,190,
பதிற்றுப் பத்து,
பட்டினப்பாலை,
புறநானூற்றுப் பாடல்கள்
என்பவற்றில் இவற்றிற்கான சான்றுகள் உண்டு.
கபாடபுரம், தென்மதுரை இருந்ததென ஐதீகங்கள் உண்டு
. இது குமரி நாட்டின் ஒரு பகுதி என்பர் சிலர்.
பேராசிரியர் சிவத்தம்பி இவை தாமிரபருணியின் வாயிலில் இருந்த நகர்கள் என்கிறார்;.
தண்ணீர் அடி அகழ்வாய்வு (Under sea archaeology) தான் இதனை மேலும் விளக்கும்

ஆரியர் வருகையும், ஆரியமயமாக்கமும்
_______________________________________
.
சங்க இலக்கியங்களில் பிராமண கருத்துக்களின் செல்வாக்கும், வடமொழிக் கலப்பும் சிறிதளவு காணப்படுகிறது
. நீhப்;பாசன விவசாயம் பெருகி,
வணிகம் வளர்ந்து
நிலவுடமையாளரும் வணிகரும் அதிகாரப் பலம் பெற்ற காலத்திலேதான் ஆரியர் வருகையும் நிகழ்கிறது.
வளர்ச்சி பெற்ற நிலக்கிழாருக்கும்; அரசர்கட்கும,; வணிகர்கட்கும் பிராமணரின் அறிவும் உதவியும் தேவைப்பட்டன.
அவர்களின்யாகம் இங்கு அறிமுகமானது.
அரசர்கள் பகையசரசர்களை வெல்ல இராச யூக யாகம் செய்தனர்.(இராச யூக யாகம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அரசனொருவனுக்குப் பெயர் உண்டு.)
வளம் பெற்ற பிரதேசங்களைக் கொடுத்து அங்கு மன்னர்கள் தமக்கு உதவி புரிய ஆலோசனை கூற வடநாட்டுப் பிராமணர்களைக் குடியேற்றினர்.
இவ்வண்ணம் ஆரியக் குடியேற்றமும் ஏற்படலாயிற்று.
ஏற்கனவே நிலம் படைத்த திராவிட (தமிழ்) நிலக்கிழார் உருவாகியிருந்தனர்.
தற்போது புதிதாக நிலம் பெற்ற ஆரிய (பிராமண) நிலக்கிழாரும் தோன்றி விடுகின்றனர்
. இவ்விரு வகை நிலக்கிழாரும் தத்தம் தனித்துவங்களைப் பேணிக்கொண்டு தமிழ் நாட்டு வரலாற்றில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துவதை வரலாற்றில் பின்னர் காணுகின்றோம்.
ஆரிய நிலக்கிழாரின் நில மேலாண்மையும் அறிவு மேலாண்மையும் தமிழ் சமூகத்தின் அதிக செல்வாக்குச் செலுத்துகிறது.
முக்கியமாக ஆரியரின் வேத உபநிடத புராணங்கள் தமிழர் வாழ்வில் ஊடுருவின.
வேத கடவுளர் கிரியைகள் பண்பாடுகள் பெரியவை என ஏற்கப்பட்டன.
தமிழர்கள் ஆரிய மயமாக்கத்திற்குட்படலாயினர்.
தொல்காப்பியத்திற் கூறப்படும் மாயோன், இந்திரன், வருணன், போன்ற தெய்வங்கள் ஆரியத் தெய்வங்களே.
சிலப்பதிகாரத்தில் பின்னாளில் நடைபெறும் இந்திரவிழா, முழுக்க முழுக்க ஆரிய விழாவாகும்.
சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காவையில் மாதவி ஆடுகின்ற பதினொரு வகை ஆடல்களும் வடமொழிக் கதைகளில் வரும் கடவுளர்கள் ஆடிய நடனங்களே.
இவ்வாறு தமிழ் நாட்டு வரலற்றுக் காலம் ஆரம்பமாகும் வேளையில் தமிழ் நாட்டில் மூன்று விதமான தமிழர்கள் காணப்படுகிறார்கள்.
1. புராதன தமிழர்கள்
2. திராவிடத் தமிழர்கள்
3. ஆரியத் தமிழர்கள்.
இப்பின்னணியில் சங்க காலம் பற்றி நோக்குவோம். சங்ககாலத்தை அறிய எமக்குதவுபவை சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டே சங்க காலம் பற்றி ஒரு கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது.
(மீதி நாளை தொடரும்)

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 6

கட்டுரையின் இறுதிப் பகுதி
சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் -6
________________________________________________________
மௌனகுரு
_______________________________________________________
ஒரு கால கட்டத்தின் சமூக அமைப்பினை தெளிவாக அறிகின்ற போதுதான் அந்தக் கால கட்டத்தின் அரசியலையும் இலக்கியத்தையும் கலைகளையம் தெளிவாகவும் பூரணமாகவும் அறிந்து கொள்ள முடியும். துரதிஷ்டவசமாக தமிழ்ச் சமூக அமைப்புப் பற்றிய ஆய்வுகள் தமிழிலே மிகவும் குறைவு.
___________________________________________________
மேற்குறிப்பிட்ட சோழர் கால சமூக அமைப்பிலிருந்தும் சோழர் கால அதிகார கட்டமைப்பிலிருந்தும் நாம் சோழர் கால சமூக கட்டமைப்பினால்
அங்கு நிலவிய தொழில் முறைமைகளையும்
சாதி முறைமைகளையும் வைத்துப்
பின்வருமாறு பிரிக்கலாம்.
சமூகத்தின் மேல் நிலையிலே அரசர்களும், அரசர்களைச் சார்ந்த அரச குடியினரும் இருந்தார்கள். இந்த அரச குடியினருக்கு உதவியாக மந்திரிகளாக, கல்வி கற்பிப்பவர்களாக பிராமணர்கள் இருந்தார்கள்.
அரசர்களுக்கு படை உதவி புரிபவர்களாக வேளாளர், நில உடமையாளர்கள் இருந்தார்கள்.
இந்த அரச, பிராமணர், வேளாளர் ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு மேல் தட்டு வர்க்கமே மையத்திலுள்ள விளைநிலங்களை தங்களுடைய சொத்துக்களாக வைத்துக் கொண்டு மையத்திலிருந்து ஆட்சி செலுத்தியவர்களாகும்.
படைகளை வைத்துக் கொண்டு அரசர்களும், அரசர்களைச் சார்ந்தோரும் வேளாளர்களும் அதிகாரம் செலுத்தஅந்த அதிகாரத்தினை ஞாயப்படுத்துகின்ற தத்துவங்களையும் நூல்களையும் எழுதி இந்த அதிகாரத்தை மக்கள் ஏற்கும்படியாக செய்கின்ற பணியினை இந்த அறிவாளர்கள் செய்தார்கள்.
பிராமணர்களின் பங்கு இதற்கு முக்கியமாக இருந்தது.
முதலாம் ராஜராஜன் காலத்திலே நிறைய பிராமணர்கள் குடியேற்றப்பட்டார்கள்
வடநாட்டிலிருந்து பிராமணர்கள் இங்கே கொண்டு வரப்பட்டார்கள்
அவர்களுக்கு சதுர்வேதி மங்கலம் என்ற சிறந்த விளை நிலங்கள் மையப்பகுதியிலே கொடுக்கப்பட்டன.
பிராமண கிராமங்கள் உருவாகியிருந்தன.
அதனை நடத்துவதற்கென பிராமணர்கள் கொண்ட சபைகள் உருவாக்கப்பட்டு தலைவர்களாகப் பிராமணர்கள் இருந்தார்கள்.
இந்த மையத்திலிருந்து பல நிலங்கள் படைத் தலைவர்களாக இருந்த வேளாளர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தன.
அந்த நிலங்களை வேளாண்வகை என்று அழைத்தார்கள்
இந்த வேளாண்வகை நிலங்களில் அடிமை வேலை செய்வதற்கென மையப்படுத்தப்பட்ட பகுதியின் தூரத்திலே சேரிப்புறத்திலே அடிமைகள் இருந்தார்கள்.
பள்ளர்கள்,பறையர்கள் என இவ்வுழைக்கும் மக்கள் ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டனர்.
ஆனால் முழு சுக பாக்கியங்களையும் அனுபவித்தவர்கள் இந்த உழுவித்து உண்பித்தவர்களான வேளாளர்களே.
அதே நேரம் சோழர் காலத்திலிருந்த அரசர்களுக்கு படைத் தலைவர்களாகச் சென்ற பலர் இருந்திருக்கிறார்கள்.
அகமுடையார், பள்ளிகள், கள்ளர், மறவர்,போன்றவர்கள் படைகளில் இருந்திருக்கிறார்கள்.
இத்தகைய சமூகப் பிரிவினர் படைத் தலமை தாங்கிச் சென்ற போது அரசன் அவர்களுக்கு நிலமானியங்கள் அளித்தான்.
இதன் காரணமாக கள்ளர், மறவர், அகமுடையார், இந்த மூவரும் தங்களை நிலவுடையாளர்களாக மாற்றி தாங்களும் வேளாளர்களோடு சமமானவர்கள் என்ற ஒரு கருத்துருவினை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
'கள்ளர், மறவர், கனத்த அகம்படியர், மெல்ல மெல்ல வந்து வேளாளர் ஆகினரே' என்கின்ற ஒரு கூற்று இங்கு நினைவு கூரத்தக்கது.
இவ்வண்ணமாக சமூகத்தின் அரச அதிகாரத்தின் மையப் பகுதியிலே அரசர்களும், அரசரைச் சார்ந்தோரும் அரச குடிகளும் பிராமணர்களும், வேளாளர் ஆகியோரும் அதிகாரம் படைபலமும் செல்வாக்கும் பெற்றவர்களாக அமைய ஏனையோர் இந்த நிலமானிய அமைப்பினை இயக்குகின்ற வகையில் பங்களிக்கின்ற குடிகளாக மாறினர்.
சமூகத்தின் இரண்டாவது நிலையில் இருந்தவர்கள் கைவினைஞர்கள் ஆவர்.
நீர்ப்பாசனத்தை நடத்துகின்ற கட்டிடங்கள் வாய்க்கால்களைக் கட்டவும் அரசர்களால் நிர்மாணிக்கப்ட்ட கோயில்களை, அரண்மனைகளைக் கட்டவும், பாதைகளைப் போடவும், ஆன சிற்பிகள் ஆச்சாரிகள் அதாவது கட்டிட நிர்மாணக்காரர்கள்,
விவசாயத்திற்கு தேவையான கருவிகளை உற்பத்தி பண்ணக் கூடிய கொல்லர்கள், தச்சர்கள், கற்தச்சர்கள் நகை வேலை செய்யக் கூடியவர்கள், உலோக வேலை செய்யக் கூடியவர்கள் என்று ஒரு தொழில் பரம்பரையினர் அடுத்த நிலையிலே முக்கியமாக இந்த சமூக அமைப்பிற்கு தேவைப்பட்டனர்.
அவர்களிடம் நிலங்கள் இருக்கவில்லை. நிலமானியம் நிலைப்பதற்கான உதவிகளை அவர்கள் செய்தனர்.
இந்த வகையிலே சமூகத்தின் இரண்டாவது படியாக அவர்கள் கருதப்பட்டனர்.
இந்த நிலங்களிலே உழுதுவதற்கும், பண்ணை வேலை செய்வதற்கும் என பறையர், பள்ளர் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்
இவர்களுக்கு இருப்பதற்கு நிலங்கள், விளைநிலங்கள், கொடுக்கப்படவில்லை
. விளைநிலங்களுக்கு தூரத்திலே இருந்த ஒரு சேரிப்புறத்திலே வசதியற்ற இடங்களில் இவர்கள் விடப்பட்டனர்.
இந்த எல்லோருக்கும் தொண்டு புரிவதற்கென, சேவை புரிவதற்கென வண்ணார், பறையர், அம்பட்டர், போன்ற சாதிகள் வகுக்கப்பட்டன.
கோயிலில் ஓதுவார்கள் கோயிலில் ஆடுபவர்கள், கோயிலில் வேலை செய்பவர்கள், என்று கோயிலுக்கென்று சில சாதியினர் வகுக்கப்ட்டனர்.
இவ்வண்ணமாக ஒரு உயர் நிலையில் இருந்து தாழ்நிலை வரைக்குமான ஒரு சாதி அமைப்பொன்று தமிழர்களிடையே உருவாகின்றது.
இந்த சாதியமைப்பினை கட்டிக்காக்கவும் சாதியமைப்பினை நிலைநிறுத்தவுமான தத்துவங்களையும் கோட்பாடுகளையும் கலாசாரங்களையும் இந்தக் கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களும் தத்துவங்களும் பிரசாரம் செய்தன.
'ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே அந்தக் காலகட்டத்தின் ஆளும் கருத்துக்களாக விளங்குகின்றன. அதாவது சமூகத்தின் ஆளுகின்ற பொருளாதார சக்தியாக எந்த வர்க்கம் விளங்குகின்றதோ எந்த வர்க்கம் பொருள் உற்பத்தி சாதனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ அந்த வர்க்கத்தின் கட்டுப் பாட்டிலேயே சிந்தனைகளும் உற்பத்திச் சாதனங்களும் இருக்கின்றன.
அதனாலேயே இத்தகைய சிந்தனை உற்பத்திச் சாதனங்களில் பின்தங்கியவாக்ளாக இருப்பவர்களின் கருத்துக்கள் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களின் கட்டப்பாட்டிலேயே இருக்க வேண்டியுள்ளது.'
சோழர்காலத்தில் நிலவிய நிலமானிய அமைப்பின் ஆட்சி முறையிலும் சமூக அமைப்பிலும் பிராமணரும், வேளாளரும், நிலம் வைத்திருப்போரும், அரசரும், வணிகரும் ஆளும் வர்க்கமாக இருந்தனர்.
சோழர் காலத்தில் வணிக வர்க்கம் மேலெழும்புகிறது.அதற்கொரு விரிவான தளமும் இருந்தது

மணிகிராமம்,
வளஞ்சியர்,
சூஸகர்
ராஜராஜப் பெருநிரவையார்,
நானா தேச திசை ஆயிரத்து ஐநூற்று
எனப் பல பெயர்களில் வணிகச் சபைகள் இயங்கின.
நிலவுடமையாளரும் வணிகரும் பணப்பலமுடையோராயும்,
பிராமணர் கல்விப் பலம் உடையோராயம்,
அரசர் படைபலமுடையோராயும் இருந்தனர்.
செல்வமும் கல்வியும் வீரமும் இணைந்து அதிகாரம் செலுத்தின.
கல்வியும், செல்வமும்,வீரமும், தமக்குள் சமரசம் செய்து தம் கீழ் உள்ளோரை அடக்கி ஆண்டன.
அச்சமூக அமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியலைத் தரும் தத்துவம் கலை, இலக்கியங்கள், பெருவாரியாக வளர இவ் ஆளும் வர்க்கம் பெருமூக்கமளித்தது.
சோழர் காலத்தில் வளர்க்கப்பட்ட வேதக்கல்வி, வேதக்கல்வியை வளர்த்து வடிவமைக்கப்பட்ட வேதப் பாடசாலைகள்
வேதக்கல்வியை வளர்க்கும் பிராமணர்கட்கு அளிக்கப்பட்ட பிரம்மதேயக் காணிகள், ஊர்கள்,
அரசர்களும் நிலப்பிரபுக்களும் போட்டி போட்டுக் கொண்டு எழுப்பிய கோயில்கள், மடங்கள், என்பனவும்,
அரசர்களைப் புகழ்ந்து எழுந்த உலா பரணி, பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்களும்
சாதிப்பாகுபாட்டை மறைமகமாக நிலை நிறுத்தும் மதமும்
சோழர்காலத்தில் ஆளும் வர்க்கம் தமது கருத்தியலை உருவாக்க எடுத்த முயற்சிகளாகும்.
இக்காலகட்டத்தில் இடைநிலையிலிருந்த தொழிலாளத் தமிழ் மக்களது கலை இலக்கியங்களோ, மிக அடித்தள நிலையிலிருந்த உழைக்கும் தமிழ் மக்களது கலை இலக்கியங்களோ, அல்லது அவர்களது வழிபாட்டுமுறைகளோ, சமயச்சிந்தனைகளோ, வாழ்க்கை முறைகளோ,பண்பாடோ, சோழர் கால பெரும் கலை இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. அது ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படவமில்லை.
இவ்வகையில் சோழர்கால சமூக அமைப்பிற்கும் அக்கால தத்துவம் கலை, இலக்கியங்கட்குமான உறவு தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.
இந்த ஒரு அடக்குமுறையின்பின்னணியில் எதிர்ப்புக் குரல் தந்த மதங்களும் இருந்தன.வைஷ்ணவம் அதில் ஒன்று.அதிலும் இராமானுஜர் ஸ்தாபித்த விசிஷ்டாத்வைத தென்கலை வைஷ்ணவ வழி வழிவந்த கம்பன் குரல் முக்கியமானது.
கம்பனின் குரல் அக்காலத்து மன்னார்களுக்கு எதிராக,அக்கால ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்தகலகக்குரல்.
நான் எழுதிய கம்பன் ஒரு கலகக் காரன்
எனும் கட்டுரையில் நான் இது பற்றி விளக்கியுளேன்.
சித்தர்களும் கலகக்குரல் எழுப்பியுள்ளனர்.
அதிகாரமும் அடக்கு முறையும் உள்ள
இடங்களில் அதனை மீறுதலும் கலகக் குரல்களும்
எழுதல் இயல்பு
.காலம் தோறும் இது நடை பெறுகிறது
முற்றும்

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 5

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் -5
________________________________________________________
மௌனகுரு
சோழ அதிகாரம் அதாவது சோழர் காலத்தில் அரச அதிகாரம் மையப்படுத்தப்பட்டதா? கூறுபடுத்தப்பட்டதா? என்பது மிகவும் முக்கியமானதொரு விவாதமாகும்
. மையப்படுத்தப்பட்டதென்றே அறிஞர்கள் தமது வாதங்களை முன்வைத்த போதும் அதன் கூறுபடுத்தப்பட்ட தன்மையினையும் கல்வெட்டுக்கள் மூலமாகவும் இலக்கியங்கள் மூலமாகவும் நாங்கள் அறிய முடிகிறது.
ஆய்வாளர் கேசவன் அவர்கள் இந்த இரண்டு கூற்றுக்களுக்குமிடையில் ஒரு மூன்றாவது ஞாயம் ஒன்றினை வைப்பார்.
அவர், சோழர் காலத்தில் இருந்த அரச அதிகாரம் மையப்படுத்தப்பட்டும் இருந்தது, கூறுபடுத்தப்பட்டும் இருந்தது. இரண்டிற்கும் ஆதாரங்கள் உண்டு என்று கூறி அதனை அவர் பின்வருமாறு கூறுவார்.
கேசவன் அவர்கள் சோழர் காலத்தினை மூன்று காலமாகப் பிரிப்பா.;
1. எழுச்சிக்காலம் - கி.பி- 850 – 985 வரையுள்ள 185 வருட காலம்
2. வளர்ச்சிக் காலம் - கி.பி - 985 – 1160 வரையுள்ள 175 வருட காலம்
3. பின்னடைவுக் காலம் - கி.பி –1160 –1260 வரையுள்ள 100 வருடங்கள்
எழுச்சிக்காலம்
எழுச்சிக் காலத்திலேதான் விஜயாலய சோழன், பராந்தகச் சோழன் போன்றவர்கள் பல்லவர் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர சோழ அரசை நிறுவி, தொண்டை மண்டலம் , பாண்டி மண்டலத்தினை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்த எடுத்த முயற்சிக்காலம் இதுதான.;
வளர்ச்சிக் காலம்
வளர்ச்சிக்காலம் 1ம் ராஜராஜசோழன் , ராஜேந்திரசோழன், குலோத்துங்கன், போன்ற புகழ் பெற்ற மன்னர்கள் தமிழகத்தினையும் தாண்டி நாடுகளைக் கைப்பற்றி சோழப்பேரரசை விஸ்தரித்த உச்சக்கட்டக் காலம் எனலாம்.
. பின்னடைவுக் காலம்
பின்னடைவுக் காலம் 2ம் ராஜராஜசோழன் 2ம் குலத்துங்கசோழன் போன்ற வலிமையற்ற மன்னர்கள் ஆண்டகாலம். இந்தக் காலத்தில் சோழப் பேரசு வீழத் தொடங்கியிருந்தது. பல மண்டலாதிபதிகளும், குறுநில மன்னர்களும் தத்தம் பிரதேசங்களை மீண்டும் தமக்குள் சுதந்திரமாக உருவாக்கத் தொடங்கிய காலம் இது எனலாம்.
பேர்ட்றன் ஸ்ரைன் அவர்கள்
இரட்டை அரசிறமைக் கோட்பாடு
என்கின்ற சொல்லினைப் பாவித்தார்.
அதாவது மையத்திலும் அரசிறமை இருந்தது.
சுற்றியிருந்த இடைநிலையிலும் அரசிறமை இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் அந்தப் பகுதியினையும் ஆண்ட மண்டலாதிபதிகளிடமும் அரசிறமை இருந்தது
. இரண்டு வகையான அரசிறமை இருந்ததினை
இரட்டை அரசிறமைக் கோட்பாடு என்பர்.
பேர்டன் ஸ்ரைன் கூறுவதைப் போல இரட்டை அரசிறமைக் கோட்பாடு என்பது இந்த ஆரம்ப காலத்திற்கும் பின்னடைவுக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கின்றதென்று கேசவன் கூறுவார். அதாவது ஒரு அரசு ஆரம்பமாகித் தன்னுடைய அரசு அதிகாரத்தினை நிலைநிறுத்தத் தொடங்கிய காலத்தில் மையத்தில் அரசிறமை இருந்திருக்கும். ஏனைய இடங்களில் மற்றவைகளின் அரசிறமை இருந்திருக்கும். இரட்டை அரசிறமை இருப்பதற்கு அந்தக் காலம் உகந்தது.
பின்னடைவுக் காலத்திலும் இதே நிலமை இருந்திருக்கலாம். அதாவது மையத்தில் சோழப்பேரரசு பலம் இழந்த போது இடைநிலையிலும் விளிம்பிலும் இருந்தவர்கள் தங்களது அரச அதிகாரத்தினை அங்கு வைத்திருக்கலாம். அங்கும் இரட்டை அரசிறமை இருந்திருக்கலாம்.
வளர்ச்சிக் காலத்தில் இரட்டை அரசுரிமை இருக்க ஞாயமில்லை.
ஏனென்று சொன்னால் மிகுந்த படைப்பலத்தடன் சோழ மன்னர்கள் ஆண்டமையினால் மையத்திலே இருந்த அரசுரிமை, அரச அதிகாரம் இடைநிலையினையும் ஆளக்கூடிய அளவிற்கு வலிமையாக இருந்தமையினால் மகாலிங்கம் அப்பாத்துரை நொபுறு கரோசிமா கூறிய அந்த உரிமைத் தன்மை கொண்ட மையமாக்கப்பட்ட அரதிகாரம் இக்காலத்திலே தான் இருந்திருக்கலாம் என்று கேசவன் விளக்குவார்.
கேசவன் கூறுவதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாம்
ஏனென்றால் இந்த வலிமையான எழுச்சிக் காலத்திலே தான் புதிய நில அறிமுகம் புதிய பாசன வசதிகளுக்கு திட்டமிடுதல் என்பன நடைபெற்றிருக்கின்றன.
இங்கு மனித முயற்சி தேவைப்பட்டது
. புதிய நிலங்களை வெட்டி, ஒழுங்குபடுத்தி விவசாயம் பண்ணவும் பாசன வசதிகளை ஏற்படுத்தவும் இங்கு மனித முயற்சி தேவைப்பட்டது.
இடைநிலையிலும் விளிம்புக் கூர்களிலும் உள்ள நதிகளின் தீரமில்லாத நீர்ப்பாசன வசதி குறைந்த பகுதிகளிலுள்ள மனித முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியிருந்தது
. அங்குள்ள மக்களை இந்த நீர்ப்பாசனம், வயல் வேலைகளுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது.
இந்த வகையில் அந்தந்த நிலங்களிலுள்ள அதிகாரங்களையும் இணைத்துக் கொண்டு தான் இந்த சோழ அரசை ஆரம்பத்தில் வளர்க்க வேண்டியிருந்தது.
ஆனால் வளர்ச்சிக் காலத்திலே இவையெல்லாம் ஊடறுத்து உற்பத்தியில் கூடுதலான பங்கை வலிந்து கோருவதற்கான அதிகாரத்துவம் செயற்பட வேண்டியிருந்தது
. ஆரம்பகாலத்தில் அதாவது வளர்ச்சிக் காலத்தில் அத்திவாரத்தினையிட்டு
விளைநிலங்களை ஏற்படுத்தி,
விளைநிலங்களை உருவாக்கி,
உற்பத்தியினை உருவாக்கிய பின்னர் இந்த உற்பத்தியிலிருந்து பெறுகின்ற உபரியை வரியாகப் பெறுவதற்கு
அல்லது வேறு வகையில் பெறுவதற்கு
ஒரு பலம் வாய்ந்த அதிகாரம் தேவைப்பட்டது.
இந்த நேரத்திலே தான் வளர்ச்சி பெற்ற சோழப் பேரரசு தன்னுடைய படை வலிமையினால் ஒருமைத் தன்மை கொண்ட அரசதிகாரத்தினை நிறுவி உற்பத்தியில் கூடுதலான பங்கினை வலிந்து மக்களிடம் அல்லது மண்டலாதிபதிகளிடம் கோரத் தொடங்கியது.
பின்னடைவுக் காலத்திலே மனித அடிமைகள் உருவாக்கப்பட்டதும் அதற்கான கருத்தியலை வழங்கும் கலை,இலக்கியம்,சமய கலாசார முயற்சிகள் பெருவாரியாகவும் இக்காலகட்டத்திற்தான் நடந்திருக்க வேண்டும்.
உற்பத்தி சாதனங்களின் பெருக்கமின்மை காரணமாகவும்,
தொழிநுட்பத்தின் தேக்கம் ஏற்பட்டதன் காரணமாகவும்,
சமூக உபரியை உற்பத்தித் துறை அல்லாதவற்றில் முதலீடு; செய்தல் காரணமாகவும்
மக்களின் கலவரங்கள் காரணமாகவும்
வலங்கை, இடங்கைப் போர் சாதிப்போர் காரணமாகவும்,
இந்த மையத்திலிருந்த அதிகாரம் குறைந்து அந்தந்தப் பிரதேசத்தில் தலைவர்கள் அதிகாரம் செலுத்தத் தொடங்கிய போது சோழப் பேரரசின் அதிகாரம் என்பது சடங்காசாரமாக பேணப்பட்டது.
இறுதியிலே பாண்டியர்கள் 12ம் நூற்றாண்டின் பின் தலையெடுத்த போது மையப்பகுதியின் அரசிறமை இறுதியில் பாண்டியர்களால் தகர்க்கப்ட்டது.
இத்தகைய ஒரு அரச அதிகாரக் கட்டமைப்பைத்தான் தான் பேர்டன் ஸ்றைன் அவர்களும் நொபுறு கரோசிமா அவர்களும் கேசவன் அவர்களும் எங்கள் முன் வைக்கிறார்கள்.
(நாளை தொடரும்)

சோழர்கால ஆட்சி முறையம் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 4

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - 4
________________________________________________________
மௌனகுரு
சோழர் காலத்தின் சமூக அமைப்பினை விளங்கிக் கொள்ள அதனுடைய அரசுபற்றியும் அவ்வரசின் அதிகாரக் கட்டமைப்பு பற்றியும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.
சோழர் காலத்து அரசு பற்றி எழுதிய மு. அப்பாத்துரை, மகாலிங்கம் போன்றோர் அவ்வரசஅதிகாரத்தினை ஒருமைத் தன்மை கொண்ட மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது மையத்திலே சகல அதிகாரங்களையும் கொண்டு சகல நாடுகளையும் தனது நேரடிப் பார்வையின் கீழ் வைத்துக் கொண்ட ஒருவகையான அரச அதிகாரம் என்று இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்
. ஆனால் இது பற்றி ஆராய்ச்சி செய்த பேர்ட்ரன் ஸ்ரெயின் அவர்கள் சோழ அரச அதிகாரத்தை வேறு வகையாக விளக்குவர்.
சோழ அரசு பல கூறுகளாகப் பிரிக்கப்பட்ட அரச அதிகாரக் கட்டமைப்பு என்று பேர்ட்றன் ஸ்ரெயின் அதனைக் கூறுகின்றார்
. பல கூறுகளாகப் பிரிக்கப்பட்ட இவ்வரச அதிகார கட்டமைப்பில் மூன்று கூறுகள் காணப்பட்டன.
ஒரு கூறு மையம் ஆகும்.
அடுத்த கூறு மையத்தினைச் சுற்றியிருந்த இடைநிலை ஆகும்
. அடுத்த கூறு இடைநிலையைச் சுற்றியிருந்த விளிம்பு ஆகும்
. ஒவ்வொரு கூறுகளையும் மும்மூன்று கூறுகளாக வகுக்கலாம்.
மையத்தினைக் கூட மையம் இடைநிலை, விளிம்பு என்று பிரிக்கலாம்
. இடைநிலையினைக் கூட மையம், இடைநிலை,விளிம்பு எனப் பிரிக்கலாம்.
விளிம்பினைக் கூட மையம், இடைநிலை, விளிம்பு என்று பிரிக்கலாம்
. இவ்வண்ணம் ஒவ்வொரு மண்டலமும் மும்மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன என்று அவர் விளக்குவார்
. மையம் என்பது அரச அதிகாரம் அதிகம் நிலவிய இடம்.
இடைநிலை என்பது அரசஅதிகாரம் குறைவாக நிலவிய பகுதி.
விளிம்பு என்பது அரச அதிகாரம் மிகக் குறைவாக நிலவிய பகுதி.
காவேரிக் கரையையும், அதையொட்டியிருந்த விளை நிலங்களையும் உள்ளடக்கி இருந்த பிரம்மதேய காணிகள், வேளாண்மைக்காணிகள், கோயில் காணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த பிரதேசத்தையே மையம் என்று அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த மையத்திலேதான் அரசனுடைய மாளிகை இருந்தது. அரசனுடைய முக்கிய காரியாலயங்கள் இருந்தன. அரசனுடைய முக்கியமான படைகள் இருந்தன.
இதைச் சுற்றியிருந்த பகுதியினை அவர் இடைநிலை என்று கூறுவார். இந்த இடைநிலையிலே தான் தொண்டை மண்டலம் பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், நடுவண் நாடுகள், போன்ற நாடுகள் இருந்தன இந்த மண்டலங்களை ஆண்டவர்கள் மண்டலாதிபதிகள.; இந்த மண்டலாதிபதிகள் சோழ அரசர்களின் கீழ் பணிபுரிந்தவர்களாவர். இவர்களுக்கு நிலங்களும் படைகளும் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பகுதிகளில் மைய அரச அதிகாரம் குறைவாக இருந்தது.
விளிம்பிலே இருந்த நாடுகள் தான் கங்கபாடி, நுளம்பாடி, போன்ற நாடுகளாகும். இங்கும் கூட அந்தந்த நாட்டு மன்னர்களே ஆண்டனர். அல்லது அரசர்களினால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் அதனை ஆண்டனர். இங்கு மைய அதிகாரம் மிகக் குறைவாக இருந்தது. இவர்கள் அரசுக்கு திறை செலுத்திவிட்டுச் தத்தம் நாட்டைத் தாமே ஆண்டனர்.
காவேரி ஆறு சோழ ஆட்சியில் முக்கியமாக விளங்கியது.
காவேரி ஆற்றை ஒட்டி மிகுந்த நீர்ப்பாசன வசதி பெற்ற நிலங்கள் இருந்தன. இந்த நீர்ப்பாசன முறைமை அதிக பயிர் விளைச்சலைத் தந்தது. இக்காவேரி நிறைந்து பயன் தரும் பகுதிகள் சோழ மண்டலமாகவும்
, காவேரி அதிகபயன் தராது வற்றி ஓடுகின்ற நீர்ப்பாசன வசதியும் அதிக விளைச்சலும் குறைந்த பகுதிகள் இடைநிலை மண்டலமாகவும்
,காவேரி செல்லாத, நீர்ப்பாசனம் இல்லாத வானம் பார்த்த பூமிகளாகயிருந்த, இங்கு ஒப்பீட்டளவில் விளைச்சல் மிக்க குறைந்த பகுதிகள் விளிம்பு மண்டலமாகவும்
சோழர் ஆட்சியில் இருந்தமையினை நாம் காணுகின்றோம்.
இவ்வகையிலே பேர்ட்டன் ஸ்ரைன் நீர்ப்பாசனப் வசதியும் பொருளாதாரப் பலமும் நிறைந்திருந்த பகுதியினை மையப்பகுதி என்றார். அங்குதான் விளைநிலங்கள் அதிகமாக இருந்தன. அரச அதிகாரம் அங்குதான் வலிமையாக இருந்தது.
அதைச்சூழ இருந்த இடைநிலைப் பகுதியிலே விளைநிலங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. அரசன் அங்கு ஆட்சிபுரியவில்லை. மண்டலாதிபதிகள் ஆண்டார்கள். அங்கே அரச அதிகாரம் பலவீனமாக இருந்தது.
விளிம்பு நிலையிலே விளை நிலங்கள் இடைநிலை விளைநிலங்களை விட மேலும் குறைவாக இருந்தன. அங்கேயும் அரச அதிகாரம் இருந்தது. ஆனால் அது சடங்காசாரமாக இருந்தது.
இவ்வண்ணமாக பேர்ட்டன் ஸ்ரைன் மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரம் என்கின்ற மகாலிங்கம், அப்பாத்துரை போன்றவர்களின் கூற்றுக்களை மறுத்து கூறுபட்ட அரச அதிகாரம் அங்கிருந்ததென்று தம் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளார்.
பேர்ட்றன் ஸ்ரைன் இவ்வண்ணம் கூறுகின்ற கருத்துக்களை நொபுறு கரோசிமா என்கின்ற ஜப்பானிய ஆய்வாளர் மறுத்துரைக்கின்றார்.
அவர் முதலாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன், போன்ற மன்னர்களின் காலத்திலே மையப்பட்ட அதிகாரம் இருந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கின்றார்.
காரணம்,நாடு,வளநாடு என்பவற்றைத் தாண்டி அதிகாரம் செலுத்துகின்ற நிலமை அதாவது அதிகாரிகளின் குறுக்கீடு இருந்திருக்கிறது என்றும்
முதலாம் இராஜராஜன் காலத்தில் நாட்டிற்கும் மண்டலத்திற்கும் இடையில் வளநாடு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அரச அதிகாரம் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கின்றது என்றும்
முதலாம் குலோத்துங்கன் ஜெயம் கொண்ட சோழ மண்டலத்தில் வளநாடு என்கின்ற கூற்றினை அமைத்து அரச அதிகாரத்தினை மையப்படுத்தினான் என்றும்
மண்டலங்களுக்கு ஊடாக அவன் நில அளவை செய்திருக்கிறான். என்றும்
முதலாம் ராஜராஜன் காலத்தில் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அதாவது ராஜராஜேஸ்வரத்திற்கு இலங்கை உட்பட விளிம்பு மண்டலங்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் மானியங்கள் வந்திருக்கின்றன. படைகள் வந்திருக்கின்றன. என்றும் கூறி மையப்படுத்தப்பட்ட அதிகாரம் இருந்தது என்று' நொபுறு கரோஷிமா இதனை நிறுவ முயன்றுள்ளார்
.(நாளை தொடரும்)

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் - பாகம் 3

சோழர்கால ஆட்சி முறையும் தமிழர் சமூக அமைப்பும் -3
________________________________________________________
மௌனகுரு
__________________________________________________________
பல்வேறு படையெடுப்புகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட போதும் இந்தியாவிலும் பல அரசுகள் தொடர்ந்து இருந்தமைக்கும் அப்பிரதேச சமூக அமைப்பு மாறாமல் இருந்தமைக்கும் காரணம்; தன்னிறைவுள்ள கிராமங்களைக் கொண்டதாக அவை இருந்தபடியினாலேயே. இதனை ஆசிய உற்பத்தி முறையென
அழைத்தனர்.
__________________________________________________________
ஆசிய உற்பத்தி முறை என்பது என்ன?
ஆசிய உற்பத்தி முறையில் அரசே நேரடி நில உடமையாளராக இருந்தது. நிலத்திற்கு தனியான உடைமை இல்லை. கூட்டு உடைமையாக இருந்தது.
ஒரு கிராமத்திற்கு நிலம் இருக்குமாயின் இந்த கிராமத்திற்கே நிலம் சொந்தமாக இருக்கும்.
நிலம் அரசுக்கு அல்லது கிராம சமுதாயத்திற்கு உடமையாக இருந்தது. கிராம சமூகத்தில் தனி நபருக்கென சுதந்திரமோ அல்லது விருப்பமோ இருந்ததில்லை.
அது கிராமத்தின் சுதந்திரமாக, கிராமத்தின் விருப்பமாகத்தான் இருந்தது.
வேலைப்பிரிவினையிலிருந்து உற்பத்தி தனித்து இருப்பதால் உற்பத்திப் பொருட்கள் பண்டத்திற்குரிய தன்மையினை இங்கு பெறாது
. இதனோடு கூட கீழ்த் திசைக் கொடுங்கோன்மையின் அரச அதிகாரம், நீண்ட நெடுங்காலம் தேக்கடைந்திருந்த உற்பத்தி நெகிழ்வு, என்பதனையும் சேர்த்துக் கொண்டால் ஆசிய உற்பத்தி முறைபற்றித் தெளிவான ஒரு அபிப்பிராயம் எமக்கு கிடைக்கும்.
கீழ்த் திசைக் கொடுங்கோன்மை என்பது கிழக்கு நாடுகளில் நிலமானிய அரசனின் எல்லையற்ற அதிகாரம் (இவ்வதிகாரம் கொடுமையான ஆட்சிக்கும் அரசனை இட்டுச் சென்றது.)
நெடுங்காலம் தேக்கமடைந்த உற்பத்தி எனில் ஒரேவிதமான உற்பத்தி நீண்டகாலம் நிலவியமை. (உற்பத்தி மாறினால் தான் சமுகம் மாறும். ஓரேவிதமான உற்பத்தியாயின் ஒரே விதமான சமுக அமைப்புத்;தான் நிலவும்.)
ஆசிய உற்பத்தி முறையின் பிரதான அம்சம் என்னவெனில் தன்நிறைவுள்ள கிராமங்களாகும்
. ஒவ்வொரு கிராமமும் தனக்குரிய நிலத்துடன் தனக்குரிய சமூக அமைப்புடன், தனக்குரிய கலை கலாசாரங்களுடன் தனியாகவே வாழுகின்ற சூழலை இந்த ஆசிய உற்பத்தி முறை ஏற்படுத்தியிருந்தது.
இதனை இவ்வாறு விளக்கலாம்.
ஒரு கிராமத்தினை எடுத்துக் கொண்டால் அங்கே ஒரு பக்கத்தில் உற்பத்தி நிகழும் நிலமும், இன்னொரு பக்கத்தில் அந்த உற்பத்திக்கான கருவிகள் செய்பவர்களும் இருப்பார்கள்.
இன்னொரு பக்கத்தில் அந்த உற்பத்தியினைக் கவனிக்கின்ற பிரபுக்கள் இருப்பார்கள்.
அந்தப் பிரபுக்களை வழிப்படுத்த, நெறிப்படுத்த, மதங்களை வளர்க்க ஒரு பக்கத்தில் மதகுருமார் இருப்பார்கள்
. அடிமைவேலைகளைச் செய்ய குடிமக்கள் இருப்பார்கள்.
இவையெல்லாம் இணைந்ததாகத்தான் அந்தக் கிராமம் இருக்கும்.
அங்கே அவர்கள் இன்னொரு கிராமத்தில் அல்லது இன்னொருவரில் தங்கியிருக்கின்ற சூழல் அவர்களுக்கு இல்லை.
இதனைத் தான் தன்னிறைவுள்ள கிராமம் என்று அழைப்பர்.
தன்னிறைவுள்ள கிராமம் எவரிடமும் கையேந்தாது.
உணவு, உடை,பொழுதுபோக்கு, மதம், கலை, எல்லாவற்றையுமே அக்கிராமம் தனக்கென உருவாக்கிக் கொண்டிருக்கும்
. தன்னிறைவுள்ள கிராமம் ஏன் பிறர் தயவை எதிர் பார்க்க வேண்டும்?
. பல்வேறு படையெடுப்புகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட போதும் இந்தியாவிலும் பல அரசுகள் தொடர்ந்து இருந்தமைக்கும் அப்பிரதேச சமூக அமைப்பு மாறாமல் இருந்தமைக்கும் காரணம்; தன்னிறைவுள்ள கிராமங்களைக் கொண்டதாக அவை இருந்தபடியினாலேயே. இதனை ஆசிய உற்பத்தி முறையென அழைத்தனர்.
சோழர் காலச் சமூகஅமைப்பினை ஆராய்ந்த கத்தலின்கவ், சோழர் கால உற்பத்தி ஆசிய உற்பத்தி முறைமைக்குக் கிட்டதட்ட வருவதாகக் குறிப்பிடுவர்.
ஆனால் இதனைக் குணா, நொபுறு கரோசிமா ஆகியோர் மறுப்பார்கள்.
நொபுறு கரோசிமா அவர்கள் தனிப்பட்ட ஆட்களின் கீழ் நிலம் இருந்தது. என்பதனையும், அவர்களுக்கென்று படை இருந்தது என்பதையும், அவர்கள் மன்னர்கட்குத் திறை செலுத்தினார்கள் என்பதனையும், காட்டி இங்கு நிலம் தனிவுடமையாக இருக்கவில்லைஎன்று நிருபித்து இது ஆசிய உற்பத்தி முறைக்குள் வராது என்று வாதிடுகிறார்.
கெயில்ஒம்பெத் அவர்கள் சோழர்கால நிலப்பிரபுத்துவத்தைச் சாதி நிலப்பிரபுத்துவம் என அழைப்பர்.
அதாவது இந்த உற்பத்தி முறையில் (நிலமானிய முறையில்) சாதி பிரதான இடம் வகித்தது.
நிலத்தின் உடமையாளர்களாக, அதிக நிலங்களைக் கொண்டவர்களாக ஒரு குறிப்பிட்ட வகுப்பினரே காணப்பட்டனர்.
முக்கியமாக பிராமணர், வேளாளர்
. ஏனைய சாதிகள் நிலம் அற்றவர்களாக இருந்தனர்
. இவர்கள் பண்ணை அடிமைகளாக வேலை செய்தனர்.
இவர்கள் சாலியர்,கைக்கோளர், பறையர்,கொல்லர்,தச்சர்,குயவர்,நாவிதர்,வண்ணார்,கணிகையர் எனப்பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சாதிப் பிரிவினையையும், அவர்களுடைய நிலையினையும் சமயங்களும் சமய தத்துவங்களும் நியாயப்படுத்தின
. சாதிமுறை இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை எனச் சில சமயவாதிகள் நிறுவினர்.
இச்சமய ஞாயப்பாடு அவர்களுக்கு ஒரு கருத்தியல் தடையை விதித்தது.
தமது அடிமை நிலை ஞாயமானது என மனதளவில் ஏற்றுக் கொள்ள வைத்தது.
இதனால் அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகத் கிளர்ந்தெழ முடியவில்லை.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு இராணுவத்தின் வேலையைச் சாதியமைப்புச் செய்தது என்பர்.
இது ஒரு வகையான பண்பாட்டு அடிமை முறையாகும்.
இராணுவத்தினால் அடக்குவதற்குப் பதிலாக கருத்துக்களால் மக்களை அடக்கி வைத்திருந்தமையாகும்.
இவ்வடக்கு முறைக் கருத்தியலைக் கோயில்களும் மடங்களும் ஊட்டின.
பணக்காரர்களினதும் நிலப்பிரபுக்களினதும் ஆதரவு அபரிதமாகக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஏன் கிடைத்தது என்பதற்கான விடையும் இங்குதான் உண்டு
.(நாளை தொடரும்)

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 4

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர் - 4
__________________________________________________________________

புராதன தமிழர்.
தமிழ் நாட்டில் இப்போது வாழும் தமிழர்களை
மானிடவியல், நோக்கில்
ஆஸ்ரோலயிட், அல்லது நீக்ரோயிட்,
மங்கோலயிட் எனப் பிரிக்கி;ன்றனர்.
கறுப்புநிறம், இடைத்தர உயரம், தடித்த உதடு, சுருட்டை மயிர், கொண்டவர்கள் அஸ்ரோலயிட் அல்லது மங்கோலயிட் இனத்தவர் எனவும்
, செம்புநிறம், உயரம், நீண்ட மயிர், மென்மையான உதடு கொண்டவர்கள் மங்கோலயிட் எனவும் பிரித்தனர்.
இவர்கள் அனைவரும் கலந்து பெருகி பல்கிய இனக் குழுமமே இன்று காணப்படும் தமிழ்ச் சமூகமாகும்.
இக்கலப்பில் பலவிதமான தோற்றப்பாடுகள் கொண்டவர்கள் தோன்றியிருக்க வேண்டும்.
பலியோதிக் காலத்திலும், மெசோலிதிக் காலத்திலும் ஆஸ்ரோலயிட் அல்லது மங்கோலயிட் இன மக்களே தமிழ் நாட்டில் வாழ்ந்தனர்.
நாகரீகம் பெற்ற இரும்புப் பாவனை அறிந்த மங்கோலயிட்டுகளான திராவிடரின் வருகையுடன் நிலைத்த, ஒழுங்கான வாழ்க்கையுடைய சமூகம் இயங்க ஆரம்பிக்கின்றது.
பலியோதிக் காலத்திலும், நியோலிதிக் காலத்திலும் சங்க இலக்கியங்களிற் கூறப்படும் குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல் நிலமக்கள் வாழ்ந்தனர்.
இவர்களே தமிழ் நாட்டின் மிகப் பழைய மூதாதையர் ஆவர்.
இவர்கள் நாடோடி இனத்தவராகவும் இடம் பெயர்ந்து வாழ்பவர்களாகவும் இருந்தனர்.
இவர்களிற் சிலரை நாம் இலங்கை வேடர்களுடனும் ஒப்பிடலாம்.
வேடர் என்போர் வேட்டைத் தொழில் புரிபவர்கள்.
தென்னிந்தியாவின் சில பகுதிகளில் மீன்பிடித் தொழிலைச் செய்யும் மீனவர்களும் வாழ்ந்தனர்.
இன்று நீலகிரி மலைப்பகுதிகளில் ஒதுங்கி வாழும்
இருளர்,
தொதுவர்,
படகர்,
போன்றோரும்,
வேடர்,
மீனவர்,
குறவர்,
பறையர்,
போன்றோரும் தமிழ் நாட்டுப் பழங்குடிகளின் வழித்தோன்றல்களே.
பின்னாளில் வந்த மங்கோலயிட் இனக்குழுவினரான திராவிட மொழி பேசும் மக்கள் இவர்களைத் தம்மோடு இணைத்துக் கொள்ளாமையினால் இவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வெளித்தள்ளப்பட்ட சாதியினராகி விட்டனர்.
(பறையர் தமிழ் நாட்டில் தம்மை ஆதித்திராவிடர் என்றே அழைத்தனர்.)

திராவிடர் வருகை.
நியோலிதிக் காலத்தில் திராவிட மொழி பேசும் மக்களின் வருகை தமிழ் நாட்டில் நடந்தேறுகிறது.
இவர்கள, புதுப்பண்பாட்டைக் கொண்டு வருகிறது.
மட்பாண்டம்,
புதிய கருவிகள்,
தாய் வணக்கம்,
முருக வணக்கம்,
இறந்தவர்களைப் மட்பாண்டத்திற்குள் போட்டுப் புதைத்தல், ஆவியுலக நம்பிக்கை,
நெல் பயிரிடுதல்,
நீர்ப்பாசன முறை
போன்ற பல புதிய பண்பாடுகளை இவர்களே தமிழ் நாட்டுக்குக் கொணர்கின்றனர்.
இப்பண்பாட்டை மானிடவியலாளர்கள் பெருங்கற்காலப் பண்பாடு என்று அழைப்பர்.
ஆல்ச்சின் இது சம்பந்தமான ஆய்வுகள் செய்துள்ளார்
. ஜெர்மனியரான Jagoe 1876 இல் பாளையம் கோட்டைக்கு 12 மைல் தொலைவிலுள்ள தாமிரபருணி ஆற்றங்கரையிலிலமைந்த ஆதிச்ச நல்லூரில் செய்த அகழ்வாராய்ச்சி புதிய தகவல்களைத் தந்துள்ளது.
இப்பகுதியில்
புதை தாழிகளையும்,
கறுப்பு, சிவப்பு மட் பாண்டங்களையும்
பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய தடயங்களையும் இவர் கண்டு பிடித்தார்.
இவரைத் தொடர்ந்து Alexandra Rea,Louse Lapicque போன்றோர் 1899,1904 ஆண்டில் நடத்திய ஆராய்ச்சிகள் மேலும் பல தகவல்களைத் தந்தன.
இவர்கள் இங்கே மண்ணின் ஆழத்தில் புதைந்து கிடந்த சில பொருட்களைக் கண்டெடுத்தனர்.
அவற்றுள் ஒன்று தங்கத்திலான தலை வட்டமாகும்.
இதே போன்ற சாமான்கள் மைசினியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எட்கார் தேஸ்டன் கூற்றின்படி இத்தகைய தலைவட்டம் இறந்தவர்களுக்கு இட்டுப் புதைக்கப்படுவதாகும்
. ஆதிச்ச நல்லூரில் காணப்படும் புதைகுழிகள் மெகதிலிக் காலத்தை அப்படியே ஒட்டியதில்லை. பெரிய கற்கள் குழிகளைச் சுற்றிக் காணப்படாமை அதிலொன்று.
ஆதிச்ச நல்லூரில் கறுப்பு, சிவப்பு மட்பாண்டங்கள் கிடைக்கின்றன. இரும்புப் பொருட்கள் கிடைக்கின்றன. செம்பிலான மோதிரம,; வளையல்கள் என்பன கிடைக்கின்றன. தங்கத் தலைவட்டம், ஊதுகுழல் என்பன கிடைக்கின்றன. செம்பிலான வேல், சேவல், என்பன கிடைக்கின்றன. இதன் காரணமாக ஆதிச்ச நல்லூரில் முருக வணக்கம் இருந்தமை தெரிய வருகிறது.
(பழனியில் காவடி எடுத்துச் செல்கையில் ஊதப்படும் குழல் இதன் தொடர்ச்சியேயாகும்.)
புராதன மனிதர்களின் கலை முயற்சிகளை வெளிப்படுத்தும் குகை ஓவியங்களையும் புதை பொருளாய்வாளர் கண்டெடுத்துள்ளனர்.
சென்னை, பெங்களுர், சாலையில் அமைந்துள்ள பாகூர் கிராமத்தில் மலைக்குகையில் சில ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பல மனிதர்கள் இருவர் குதிரையில் சவாரி செய்வது போன்ற ஓவியம் அது.
அவை இயற்பண்பு சார்ந்ததாயில்லை. ஒரு மனிதன் கையில் வாளை உயர்த்திய படி சவாரி செய்வது போன்றும் ஓவியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆர்க்காட்டு மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு அருகாமையில் உள்ள கீழ்க்கலை எனும் சிறு கிராமத்தில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல குழு மனிதர்களை அவை பிரதிபலிக்கின்றன.
சக்கரம், பல குறியீடுகள்
என்பன ஓவியத்தினருகிற் காணப்படுகின்றன
. இவை எழுத்துக்கள் அல்ல.
அவை குலக்குழுச் சின்னங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவ்வக் குலங்களைச் சேர்ந்த ஓவியர்கள் இவற்றை வரைந்திருக்கலாம்
ஆல்ச்சின் எனும் புதைபொருள் ஆராய்சசியாளர் இவ் ஓவியங்களை நியோலிதிக் காலத்துக்குரியன என்கிறார்.
இதை விட மதுரையிலுள்ள, நாகமலை புதுக்கோட்டை பகுதிகளிலும் புராதன ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
உருவங்களின் புறப்பகுதிகளே (Out line) இவற்றில் வரையப்பட்டுள்ளன.
இவை ஆயுதம் தாங்கிய மனிதர்களைக் காட்டுகின்றன.
குதிரை,
கடிவாளம்,
அதற்கான தோல் ஆடைகள்,
ஆயுதம், என்பன மெகதலிக் காலத்தை இவை சேர்ந்தன, என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மெகதலிக் காலத்திற்குரியவர்களும் பெருங்கற் பண்பாடெனும் புதிய பண்பாட்டைக் கொண்டவர்களும் மங்கோலாயிட் இனத்தினரும் திராவிட மொழி பேசுபவருமான நாகரிகம் வாய்ந்த திராவிடர் ஆற்றங்கரைகளிலும் வளமான நிலப்பகுதிகளிலும் குடியேறினர்.
இக்குடியேற்றத்தினை புராதன தமிழ் நாட்டு மக்கள் எதிர்த்துப் போரிட்டிருக்க வேண்டும்.
ஆனால் வலுவும், நாகரிகமும், ஒழுங்கும் மிக்க திராவிட மக்கள் அவர்களை வென்றனர்.
இவ்வெல்லுகை மூன்று விதமான தமிழ் மக்களைத் தமிழ் நாட்டில் உருவாக்கிற்று.

1. புராதன தமிழ் மக்கள்
2. திராவிடருடன் கலந்த உருவாகிய கலப்பின மக்கள்
3. திராவிட மக்கள்
இத்தகைய பிரிவே திராவிட மக்களிடையே தோன்றிய சாதிப்பாகுபாட்டிற்கும் சமூகவேறுபாட்டிற்கும் அடித்தளமாயிற்று.
மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 3

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர்- 3
__________________________________________________________________
பழங்கற்காலச் சின்னங்கள்.
புராதன இந்திய வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் றொபட்புறூஸ் பூட் என்ற மண்ணியியலாளர் 1863 இல் சென்னைக்கருகில் பலியோதிக்காலக் (பழங்கற்காலக்) கைக்கோடரி ஒன்றைக் கண்டெடுத்தார்
அவர் அதனைக் 2லட்சம் வருடங்களுக்கு முந்தியது. என்று கணிப்பிட்டார்.
பஞ்சாப்பின் சோன் பள்ளத்தாக்கிலிருந்த கற்கால மக்களை விட முன்னேறிய மக்களாக சென்னை மக்கள் இருந்திருக்க வேண்டும் என்று இவர் கருத்துரைத்தார்.
சோன் பள்ளத்தாக்கு மக்கள் தமது எதிரிகளைத் துரத்த மாத்திரமே கல்லை உபயோகித்திருந்தனர். என்றும் சென்னைப் பழம் மக்களோ ஒரு காரியத்திற்காகக் கல்லை மாற்றம் செய்துள்ளனர் ஆதலால் அவர்களைவிட இவர்கள் முன்னேறியவர்கள் என்பதும் இவர் கருத்து.
சென்னைக்கு வடக்கே கோட்டையர் (Kottaiyar) ஆற்றுப்படுக்கையில் பழங்கற்காலச் சின்னங்கள் சில கண்டெடுக்கப்பட்டன.
தென் சென்னையிலுள்ள அதிராம் பக்கத்தில் (அச்சிறுபாக்கம்) கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதன்படி பழங்கற்கால மனிதர் நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பவராக அன்றி அலைந்து திரிபவர்களாகவும் காய்கனிகள், மிருக இறைச்சி உண்டு வாழ்வராகவும் இருந்தனர்.
இக்காலமனிதர் எதனையும் உற்பத்தி செய்யவில்லை. சூழ என்ன உண்டோ அதனையே உணவாக உண்டு உயிர் வாழ்ந்தனர்.

இடைக்கற்காலச் சின்னங்கள்.
மெசோலிதிக்கால (இடைக்கற்காலம்) மனிதர்கள் வாழ்ந்த தடத்தினை இராமநாதபுரம், திருநெல்வேலிப் பகுதிகளிலும்
மதுரைக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் கண்டுபிடித்தனர்.
இங்கும் கற்காலத்திற்குரிய கைக்கோடரிகள் சில கண்டெடுக்கப்பட்டன.
இங்கு Agate,Jaspan போன்ற பல்வேறு கற்களினாலும் செய்யப்பட்ட பல கருவிகள் கிடைத்தனர்
இங்கு கற்களை ஈட்டி நுனி, கம்புநுனிகளுக்குப் பயன்படுத்திய சான்றுகள் கிடைத்துள்ளன.
இத்தடயங்கள் சில திருநெல்வேலிப் பகுதியிலுள்ள சோயபுரத்திலும் கிடைத்துள்ளன.
சென்னர் என்னும் ஆய்வாளர் இதனை கி.மு 4000 ஆண்டுக்குரியதெனக் கணிப்பிடுவர். (இத்தகைய கற்கருவிகள் தமிழ் நாட்டிற் பாவனையில் இருந்த காலத்தில் எகிப்தில் பிரமிட்டுக்களைக்கட்டும் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.)

புதியகற்காலச் சின்னங்கள்.
நியோதிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) வேகமான வளர்ச்சி மனிதர் கையாண்ட கருவிகளில் ஏற்பட்டுள்ளது.
இது மனிதரின் வாழ்க்கை முறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
இக்காலத்தில் மனிதர் மந்தைகளைப் பழக்க ஆரம்பித்திருந்தனர்.
தானியங்களை, பூண்டுகளை நாட்டி அதிலிருந்து பயன்பெறும் முறையை அறிய ஆரம்பித்திருந்தனர்.
விவசாயத்தின் ஆரம்ப நிலையில் இம்மக்கள் இருந்தனர்.
நெருப்பைக் கண்டுபிடித்து உபயோகிக்கத் தொடங்கியதும் இக்காலத்திலே தான் எனலாம்.
இந்நாகரிகம் உருவான பகுதியினையும் கருவிகளையும் புறூஸ் பூட்டே கண்டுபிடித்தார்.
மிகவும் செம்மைப்படுத்தப்பட்ட
கைக்கோடரி
, சுத்தியல்,
ஆகிய கருவிகளை சேலம் பகுதியிலுள்ள சிவோரி (Shevory) மலைப்பகுதியில் இவர் கண்டெடுத்தார்.
வட ஆர்க்காட்டுப் பகுதியில் திருந்திய நிலையிலிருந்த மண்வெட்டிகளை னுசு.S.R. ராவ் கண்டெடுத்தார்.
மட்பாண்டமும் இங்கு கண்டெடுக்கப்பட்டது.
மட்பாண்டம் பொருளாதார வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிப்பது. சேமிப்பின் அடையாளம் அது.
விவசாயத்தாலும் கால்நடை வளர்ப்பாலும் ஏற்பட்ட உபரி சேகரிக்கப்படும் பாத்திரம் அது
.
புதியகற்கால மட்பாண்டத் தயாரிப்பு.
நியோதிலிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) இரண்டு விதமான தொழிற்சாலைகளும்( Factories) தொழிலுற்பத்தியும் (Industry) இருந்தன என ஆய்வாளர் கூறினர்.
(தொழிற்சாலை, தொழிலுற்பத்தி என்பதனை இன்றைய அர்த்தத்தில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது) அவையாவன.
1. பானை தயாரிக்கும் தொழிலும் தொழிற்சாலையும்
2. கருவிகள் தயாரிக்கும் தொழிலும் தொழிற்சாலையும்.
சிவப்பு, கறுப்பு, பிறவுண், நிறங்களில் வித்தியாசமான மட்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டன.
அந்த மட்பாண்டங்களில் சிறிதளவு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.
இம்மட்பாண்டங்கள் கைகளினாலேயே செய்யப்பட்டிருந்தன.
(சக்கரம் போன்ற கருவி பாவிக்கப்படவில்லை.)
புதியகற்காலத் (நியோலிதிக்காலத்) தமிழர் 18 விதமான முறையில் 67 வகையான மட்பாண்டங்களைத் தயாரித்திருந்தனர் எனத் தொல்பொருளியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பலவகையான மட்பாண்டக் கருவிகளுக்கும் அப்பால் பல வகையான கைக்கருவிகளையும் நியோலிதிக் காலத் தமிழர் உற்பத்தி செய்தனர். எனத் தொல்பொருளியலாளர் கண்டு பிடித்துள்ளனர்.
கோடரிகள்,
சுற்றியல்கள்
கூர்மையான ஆயுதங்கள்,
என்பன இவற்றுட் சில
இவை யாவும் நியோலிதிக் கால மக்கள் பெற்ற வளர்ச்சியைக் காட்டுகின்றன.
பலியோலிதிக் காலத்தில் (பழங்கற்காலத்தில்) உணவு தேடி வாழ்ந்த தமிழர் மெசோலிதிக் காலத்தில் (இடைக்காலத்தில்) உணவைச் சேகரிக்கத் தொடங்கி நியோலிதிக் காலத்தில் (புதிய கற்காலத்தில்) உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.
உணவு தேடுதல், வேட்டையாடும் காலம் (Food Hunting)
உணவைச் சேகரித்தல் உணவு சேகரிக்கும் காலம் (Food gathering stage)
இது சற்று வளர்ச்சி பெற்ற காலமாகும்
. உணவை உற்பத்தி செய்தல் (Food productionj) இன்னும் வளர்சசி பெற்ற காலமாகும்.
வேட்டையாடும் காலத்திலிருந்து
உணவு உற்பத்தி செய்யும் காலத்திற்கு
புராதன தமிழர் உடனே வந்து விடவில்லை.
இடைக் காலத்தில் அவர்கள் செய்த
மந்தை மேய்ப்பு,
வீட்டுப் பிராணிகளை (ஆடு, மாடு, கோழி, பன்றி என்பனவற்றை) உணவுக்காகவும் வேலை செய்வதற்காகவும் வளர்த்தல்
இவற்றைப் பாதுகாக்க நாயை வளர்த்தல்
என்பனவெல்லாம்
வேட்டையாடும் காலத்திலிருந்து உணவு உற்பத்தி வரை மனித குலம் தாம் வளர எடுத்த முயற்சிகளாகும்.
உணவு உற்பத்தி செய்யத் தொடங்கிய பின்னரேயே புராதன தமிழர் முன்னேற்றத்தின் முதற்படியில் கால்வைக்கின்றனர்.
ஆரம்பத்தில் புராதன தமிழர் சமவெளியில் விவசாய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
மேட்டுப் பாங்கான பகுதிகளிலேயே மேற் கொண்டனர். எனத் தொல்லியலாய்வாளர் கூறுகின்றனர்.
இந்த நியோலிதிக் காலத்திலேதான் தமிழ்நாட்டுக்கு இரும்பு அறிமுகமாகின்றது.
நியோலிதிக் காலத்தின் தனித்துவமும் இதுவே.
தமிழ் நாட்டின் சிந்துவெளி நாகரிகம் போல செம்புக்காலம் இருக்கவில்லை
. புதிய கற்காலத்தையடுத்து நேராக இரும்புக் காலத்துக்குள் தமிழ் நாடு சென்று விடுகிறது
.
இந்நியோலிதிக் காலம் மிக நீண்ட காலம் நிலவியது என்பர்
தொல்வியலாளர்கள் கி.மு3000லிருந்து கி.மு 1000 இன் நடுப்பகுதி வரை (ஏறத்தாழ 2500 வருடங்கள்) இக்காலம் நிலவியது என்பர்.

இந்நியோலிதிக் காலத்தைத் தொல்லியலாளர்கள் மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளனர்.
1. கி.மு 2800 – 200
2. கி.மு 2000 – 1800
3. கி.மு 1800 - 500
நியோலிதிக்கின் மூன்றாவது காலகட்டத்திலே தான் உலோகத் தொழினுட்பத்தில் முக்கியமான வளர்ச்சிகள் ஏற்பட்டன.
இக்காலகட்டத்திலே தான் இலக்கியங்கள் எழுந்தன
. எழுத்து வடிவம் கண்டு பிடிக்கப்பட்டது.
பலியோதிக்,
மெசோலிதிக்
, நியோலிதிக்,
இம்மூன்று காலகட்டங்களிலும்
தமிழ் நாட்டில் வாழ்ந்த மனிதர்கள் யாவர்?
மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)