Tuesday 21 April 2015

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 2

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை
கட்டுரைத் தொடர்- 2
_____________________________________________________________
தமிழர்களின் புராதன வரலாறும் இப்பின்னணியில் எழுதப்படும் போதுதான் ஏற்புடமை ஏற்படும்.அல்லாவிடில் நாம் ஐதிகக் கதைகளில் வாழுகின்ற ஓர் இனமாகவே கணிக்கப்படுவோம்.
_______________________________________________________________
மானிடவியலாளரின் மனித சமூக வரலாறு பற்றிய கருத்து.
19ம் நூற்றாண்டின் பரிணாமவாத மானிடவியலாளர்கள்
மார்கன்,
எட்வர்ட்,பி டைலர்,
ஹென்றி,
ஹேர்பட் ஸ்பென்சர்,
போன்றோர்.
இவருள் முக்கியமானவர் மார்கன.
1877இல் இவர் தமது நூலில் பரிணாமவாத மானிடவியற் கருத்தை முன் வைத்தார்
. இவர் மனித சமூக வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்தார்.
அவையாவன.
அ. காட்டுமிராண்டி நிலை.
ஆ. அநாகரிக நிலை
இ. நாகரிக நிலை
காட்டுமிராண்டி நிலை மூன்று வகைப்படும்.
அவையாவன
முதற்கட்டம்,
இரண்டாம் கட்டம்,
மூன்றாம் கட்டம்.
முதற்கட்;டத்தில் காட்டுப்பொருள் சேகரிப்பும்,
இரண்டாம் கட்டத்தில் மீன்பிடிப்பும், தீ கண்டு பிடிப்பும்,
மூன்றாம் கட்டத்தில் வேட்டையாடலும் அதற்கான கருவி தயாரித்தலும் நடைபெற்றுள்ளன.
காட்டுமிராண்டிக் காலத்தில் குடும்ப அமைப்பு, தோற்றம் பெறவில்லை.
மந்தைக் கூட்டங்கள் போலவே மக்கள் வாழ்ந்தனர்.
தாயை மாத்திரமே பிள்ளைகள் அறிவர்.
தகப்பனை அறியாதிருந்தனர்.
இதனைத் தாய் வழிச் சமூக அமைப்பு என்பர்.

அநாகரிக நிலைக் காலமும் மூன்று வகைப்படும்.
முதற்கட்டத்தில் மட்பாண்டம் கண்டுபிடித்தனர்.
இரண்டாம் கட்டத்தில் விலங்குகளைப் பழக்கவும் சிறியளவு விவசாயமும் செய்யவும் ஆரம்பித்தனர்.
மூன்றாம் கட்டத்தில் இரும்புப் பாவனை வருவதுடன் மொழியின் வரிவடிவமும் வந்து விடுகிறது.
இக்காலகட்டத்தில் வெளிக்குழு மணமுறை, உருவாகிவிடுகிறது.
தனிச்சொத்து தோன்றிவிடுகிறது.
தந்தை வழிச் சமூகம் உருவாகக் குடும்பமும் தோன்றி விடுகிறது.
மூன்றாவது கட்ட நாகரிக நிலையில் அரசு ஒரு நிறுவனமாகி சகல அதிகாரமும் கொண்டதாகி விடுவதுடன் அதிகாரம் பெற்ற கூட்டங்களே அரசின் அங்கங்களாகி விடுவதுடன் விவசாயமும் வியாபாரமும் பெருக ஆரம்பித்து விடுகின்றன.
. வரலாறும் தோன்றி விடுகிறது.
மாக்ஸும், ஏங்கல்ஸும் மார்கனைப் பின்பற்றிக் தொழினுட்பப் பரிமாணங்களைக் கட்டமைத்தனர்.
கீழ்வரும் முறையில் மனித சமூகம் தொழினுட்பத்தில் முன்னேறியது என்பர் அவர்கள்.
1. உணவுச் சேகரிப்பு
2. மீன்பிடிப்பு
3. வேட்டையாடுதல்
4. மட்பாண்டம் வனைதல்
5. விலங்குகளைப் பழக்கல்
6. விவசாயம்
7. உலோக வேலை
8. இரும்புப் பாவிப்பு.
இப்பரிமாணவாத மானிடவியல் பற்றிச் சில விமர்சனங்கள் இருப்பினும் பொதுவாக இப்பிரிவுகள் ஏற்கப்படுகின்றன
. இப்பின்னணி அகழ்வாய்வினை விளங்கிக் கொள்ள உதவும்
சரித்திரவியலாளர்களின் பகுப்பு.
சரித்திரவியலாளர் தொல்பொருள்களின் துணை கொண்டு சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி அறிய முயற்சி செய்துள்ளனர்.
அம்மனிதர்கள் விட்டுச் சென்ற கருவிகள் இதற்குத் துணைபுரிகின்றன.
கல்லிலான ஆயுதங்களைக் கையாண்டு மனிதர் இயற்கையை வென்று வளர்ந்த அந்தக் காலத்தைக் கற்காலம் என அழைத்த மானிடவியலாளர் அதனை
பலியோதிக் காலம் (பழைய கற்காலம்)
மெசோலிதிக் காலம் (இடைக்கற்காலம்)
நியோலிதிக்காலம் (புதிய கற்காலம்)
என மூன்றாக வகுத்தனர்.
பழங்கற்காலத்தில் மனிதர் கையிற் கிடைத்த கற்களை மிருகங்களைத், தாக்க, தம் காரியங்களை ஆற்றப் பயன்படுத்தினர்.
ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் கிடைத்த கூரிய கற்கள் இவ்வாறு அவர்கட்கு உதவின
. இடைக்கற்காலத்தில் அக்கற்களைக் கூராக்கி அல்லது துளையிட்டு உபயோகிக்கக் கற்றுக் கொண்டனர்.
புதிய கற்காலத்தில் அவற்றை மேலும் கூராக்கி கம்பின் நுனியிலும் அம்பின் நுனியிலும் பொருத்தி நீண்ட தூரம் ஏவக்கற்றுக் கொண்டனர்.
பின்னரேயே உலோகங்களை, முக்கியமாக இரும்பைக் கண்டு பிடித்தனர்.
அதன் பின்னர்தான் மனித நாகரிகம் விரைவாக முன்னேறத் தொடங்கியது.
உலக வரலாற்றில் நாகரிகமடைந்த இனங்களின் வரலாறுகள் யாவும் இப்பின்னணியில் விளக்கப்பட்டுள்ளன
.
தமிழர்களின் புராதன வரலாறும் இப்பின்னணியில் எழுதப்படும் போதுதான் ஏற்புடமை ஏற்படும்
. அல்லாவிடில் நாம் ஐதிகக் கதைகளில் வாழுகின்ற ஓர் இனமாகவே கணிக்கப்படுவோம்.
மேற்குறிப்பிட்ட பின்னணியில் தமிழ் நாட்டில் நடந்தேறிய அகழ்வாராய்வுகளில் முக்கியமான சிலவற்றை முதலில் நோக்குவோம்.
மௌனகுரு
(மீதி நாளை தொடரும்)

No comments:

Post a Comment