Tuesday 21 April 2015

சங்ககாலம் காலமும், சங்க இலக்கியங்கள் - ஒரு மீள்பார்வை- கட்டுரைத் தொடர் - 5

சங்ககாலம் எனப்படும் காலமும்,
சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களும்.
-ஒரு மீள்பார்வை-
கட்டுரைத் தொடர்- 5
________________________________________________________ மௌனகுரு
திராவிடரின் வளர்ச்சி.
________________________
நீர்ப்பாசனம், மிகுந்த வளமுள்ள பகுதிகளில் நிலையாக வாழத் தொடங்கிய திராவிடர் பொருளாதார வளம் பெற்று உயர்ந்தோராகவும்,
விளிம்புகளில் நீர்ப்பாசன வளம் குறைந்த பகுதிகளில் வாழ்ந்தோர் வசதி வாய்ப்புகளில் அவர்கட்கு அடுத்த படியிலும்
இவர்கட்கு அப்பால் தனித்து வாழ்ந்தோர் கீழ்ப்படியிலும் கணிக்கப்பட்டனர்
. இவர்களுக்கிடையே ஓயாத போர்கள் நிகழ்ந்தன.
வெட்சி, வஞ்சி உழிஞைப் போர்கள் இவற்றின் பழைய நினைவுகளையே குறிக்கின்றன.
தமிழ் நாட்டுக்கு இவ்வண்ணம் வந்த திராவிடர்கள் மத்திய தரைக்கடல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும்
மொசப்பதேமிச நாகரிகம,; பேர்சிய நாகரிகத்துடன் தொடர்புடையவர்கள் என்பதும் பலர் முடிவு.
திராவிடரின் வழிபாடான மலையி;ல் முருகனை வணங்கும் வணக்கத்தை சுமேரியாவில் மலைக் கோயில் வணக்கத்துடன் தொடர்பு படுத்துவர்.
அங்கு காணப்பட்ட ஊர் எனும் சொல் தமிழிலும் ஊர் என வழக்கிலுள்ளதுடன் அதே அர்த்தத்தைத் தருவதையும் சுட்டிக் காட்டுவர்.
அங்கு நிலவிய மலைப் பெண் தெய்வ வணக்கமே தமிழர் மத்தியில் தாய்த் தெய்வ வணக்கமாக வந்தது என்பர்.
தமிழர் மத்தியில் வந்த கோயில் தேவதாசி முறையை அக்கோயில் முறையுடன் ஒப்பிடுவர்.
இவ்வண்ணம் சுமேரியருக்கும் திராவிடருக்கும் ஒற்றுமைகளை எடுத்துக் காட்டி இத் திராவிடர் மத்திய தரைக் கடலில் இருந்து இந்தியா வந்தவர் என நிறுவுவர்.
திராவிடரின் தமி;ழ் நாட்டு வருகை
________________________________________
1. தரைவழியாகவும்
2. கடல் வழியாகவும்
நடந்தேறியது.
தரை வழியாக வந்தோர்
ஆப்கானிஸ்தான்,
பாக்கிஸ்தான்
சிந்துவெளி,
மேற்கு இந்தியாவுக்கூடாக
தென்னிந்தியாவுக்கு வந்து
அங்கு,
மலையாளத்தார்
ஆந்திரர், என நான்கு வகை திராவிட மொழி பேசும் இனங்களாகப் பிரிந்தனர் என்பது தரை வழிக் தமிழர் தெலுங்கர் கொள்கையினர் கருத்து.
திராவிடர் மத்தியதரைக்கடலில் இருந்து கப்பலில் நேரடியாக தென்னிந்தியா நோக்கி வந்து தமிழ் நாட்டில் தம் நாகரிகம் பரப்பினர் என்பது கடல் வழிக் கொள்கையினர் கருத்து
.
இவை இரண்டும் நிகழ்ந்தன என்பதும் சிலர் முடிவு.
திராவிட இனத்தினர் மேய்ச்சல் நிலப்பகுதிகளில் குடியேறி நீர்ப்பாசனம் செய்து உபரி கண்டு மென்மேலும் நாகரிகம் பெற்ற காலத்திலே தான் வடநாட்டுத் தொடர்பும் றோம கிரேக்க தொடர்புகளும் இவர்கட்கு எற்பட்டன.
அரிக்கமேட்டு அகழ்வாராய்வுச் சின்னங்கள்.
அரிக்கமேட்டில் நடந்த அகழ்வாராய்வுகள் இதற்குச் சான்று பகருகின்றன.
அரிக்க மேட்டில் குளத்தூர், ஆலக்கரை திருக்கம்பிளியூர் எனும் இடங்களில் சிவப்பு, கறுப்பு, மட்பாண்டங்கள் கிடைக்கின்றன
. இவை றோமர் பாவித்த மட்பாண்டங்கள் என ஆய்வாளர் கூறுகின்றனர்.
தமிழ் பிராஹ்மிக்கல்வெட்டுக்கள் இங்கு கிடைக்கின்றன.
எழுத்து வளர்ச்சி தமிழில் ஆரம்பித்தமைக்கு இது சான்று.
சமண பௌத்தர்களின் வருகை இக்காலத்தில் தான் நடைபெற்றிருக்கும்.
நகரங்கள் தோற்றம் பெற்ற காலமும் இதுவே
. நகரம் வியாபாரிகளால் உருவாவது.
இதனால் ஒரு வர்த்தக சமூகம் உருவாயிருக்க வேண்டும.;
பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சியில் நகரத்தையும் வர்த்தக சமூகத்தையும் பற்றிய செய்திகளைக் காணுகிறோம்.
கலித்தொகை பரிபாடலிலும் நகரங்களின் சிறப்பு பேசப்படுகிறது.
கரூர்தாலுகா
, ஆறு நாட்டார் மலை
ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பிராஹ்மி கல்வெட்டுக்கள் பற்றி மகாதேவன், மயிலை சீனிவேங்கடசாமி, சு. நாகசாமி, பன்னீர்;ச் செல்வம் ஆகிய தொல்பொருளாளர் ஆராய்ந்துள்ளனர்.
எழுத்துக்கலை இக்காலத்தில் தோன்றி விட்டது என்றும், தமிழ் ஒரு எழுத்து மொழியான காலம் இக்காலம் எனவும் இவர்கள் கூறினர்.
கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு இவ்வெழுத்துக்கள் உரியன என நிறுவிய இவர்கள் தமிழ், பிராமியைத் தழுவி உருவாயிற்று என்றும் கூறினர்.
முதல் இரண்டாம் நூற்றாண்டுகள் பரிசோதனை நிலையிலிருந்த இவ்வெழுத்துக்கள் பின்னர் நிறுவப்பட்டு ஏற்கப்பட்டு விட்டன என்பர் இவர்.
இக்காலத்திலே தான் வாய்மொழியில் இருந்த பண்டைய இலக்கியங்கள் எழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் இக்காலத்தில் இருவகை இலக்கியங்கள் எழுந்தன.
1. பழைய வாய்மொழிப் பாடல்கள் எழுத்தில் எழுப்பட்டன.
2. புதிதாகவும் பல பாடல்கள் எழுதப்பட்டன.
பாணர் - புலவர் என்ற பேதம் ஏற்படுகிறது.
பாணர் என்போர் கல்வி அறிவற்றோர் - பாட்டுப்பாடுபவர்- தலைவர்களைப் புகழ்வோர்
; புலவர் என்போர் அறிவாளிகள். செந்நாப்புலவர் என்ற சொற்பிரயோகம் உருவானது
. அறிவாளிகளே சான்றோர் என அழைக்கப்பட்டனர்.
காவிரிப்பூம் பட்டின அகழ்வு ஆராய்வுச் சின்னங்கள்.
__________________________________________________
காவிரிப்பூம் பட்டினத்தில் நடைபெற்ற அகழ்வாய்வு மேலும் பல புதிய தகவல்களைத் தந்தது. அங்கு பின் வரும் புதை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
1. சிவப்பு – கறுப்பு மட்பாண்டம்
2. வட்டக்கிணறுகள்.
3. றோமனிய நாணயங்கள்.
4. பலவகைப்பட்ட அழகான சுடுமண் சிற்பங்கள்
5. செங்கல்லால் கட்டப்பட்ட அணைக்கட்டுக்கள். (கீழையூரில்)
6. நீர் வளங்கள் (வானகிரியில்);.
7. பாதி பெறுமதியான ரத்தினக் கற்கள்.
8. மூன்று புத்த மடலாயங்கள்.
காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள வெள்ளையன் இருப்பு (Roman colony)
எனும் இடமும்,
மேற் குறிப்பிட்ட புதை பொருள் சின்னங்களும்
காவிரிபூம்பட்டினம் பிறநாட்டார் குடியிருப்புக்களைக் கொண்ட, வர்த்தகம் இடம் பெற்ற, நகரமயமாகிய ஒரு கலாசார மத்தியஸ்தானம் (Cultural centre)என்பதற்கான சான்றுகளாகும்.
அகம் 110,181,190,
பதிற்றுப் பத்து,
பட்டினப்பாலை,
புறநானூற்றுப் பாடல்கள்
என்பவற்றில் இவற்றிற்கான சான்றுகள் உண்டு.
கபாடபுரம், தென்மதுரை இருந்ததென ஐதீகங்கள் உண்டு
. இது குமரி நாட்டின் ஒரு பகுதி என்பர் சிலர்.
பேராசிரியர் சிவத்தம்பி இவை தாமிரபருணியின் வாயிலில் இருந்த நகர்கள் என்கிறார்;.
தண்ணீர் அடி அகழ்வாய்வு (Under sea archaeology) தான் இதனை மேலும் விளக்கும்

ஆரியர் வருகையும், ஆரியமயமாக்கமும்
_______________________________________
.
சங்க இலக்கியங்களில் பிராமண கருத்துக்களின் செல்வாக்கும், வடமொழிக் கலப்பும் சிறிதளவு காணப்படுகிறது
. நீhப்;பாசன விவசாயம் பெருகி,
வணிகம் வளர்ந்து
நிலவுடமையாளரும் வணிகரும் அதிகாரப் பலம் பெற்ற காலத்திலேதான் ஆரியர் வருகையும் நிகழ்கிறது.
வளர்ச்சி பெற்ற நிலக்கிழாருக்கும்; அரசர்கட்கும,; வணிகர்கட்கும் பிராமணரின் அறிவும் உதவியும் தேவைப்பட்டன.
அவர்களின்யாகம் இங்கு அறிமுகமானது.
அரசர்கள் பகையசரசர்களை வெல்ல இராச யூக யாகம் செய்தனர்.(இராச யூக யாகம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அரசனொருவனுக்குப் பெயர் உண்டு.)
வளம் பெற்ற பிரதேசங்களைக் கொடுத்து அங்கு மன்னர்கள் தமக்கு உதவி புரிய ஆலோசனை கூற வடநாட்டுப் பிராமணர்களைக் குடியேற்றினர்.
இவ்வண்ணம் ஆரியக் குடியேற்றமும் ஏற்படலாயிற்று.
ஏற்கனவே நிலம் படைத்த திராவிட (தமிழ்) நிலக்கிழார் உருவாகியிருந்தனர்.
தற்போது புதிதாக நிலம் பெற்ற ஆரிய (பிராமண) நிலக்கிழாரும் தோன்றி விடுகின்றனர்
. இவ்விரு வகை நிலக்கிழாரும் தத்தம் தனித்துவங்களைப் பேணிக்கொண்டு தமிழ் நாட்டு வரலாற்றில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துவதை வரலாற்றில் பின்னர் காணுகின்றோம்.
ஆரிய நிலக்கிழாரின் நில மேலாண்மையும் அறிவு மேலாண்மையும் தமிழ் சமூகத்தின் அதிக செல்வாக்குச் செலுத்துகிறது.
முக்கியமாக ஆரியரின் வேத உபநிடத புராணங்கள் தமிழர் வாழ்வில் ஊடுருவின.
வேத கடவுளர் கிரியைகள் பண்பாடுகள் பெரியவை என ஏற்கப்பட்டன.
தமிழர்கள் ஆரிய மயமாக்கத்திற்குட்படலாயினர்.
தொல்காப்பியத்திற் கூறப்படும் மாயோன், இந்திரன், வருணன், போன்ற தெய்வங்கள் ஆரியத் தெய்வங்களே.
சிலப்பதிகாரத்தில் பின்னாளில் நடைபெறும் இந்திரவிழா, முழுக்க முழுக்க ஆரிய விழாவாகும்.
சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காவையில் மாதவி ஆடுகின்ற பதினொரு வகை ஆடல்களும் வடமொழிக் கதைகளில் வரும் கடவுளர்கள் ஆடிய நடனங்களே.
இவ்வாறு தமிழ் நாட்டு வரலற்றுக் காலம் ஆரம்பமாகும் வேளையில் தமிழ் நாட்டில் மூன்று விதமான தமிழர்கள் காணப்படுகிறார்கள்.
1. புராதன தமிழர்கள்
2. திராவிடத் தமிழர்கள்
3. ஆரியத் தமிழர்கள்.
இப்பின்னணியில் சங்க காலம் பற்றி நோக்குவோம். சங்ககாலத்தை அறிய எமக்குதவுபவை சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டே சங்க காலம் பற்றி ஒரு கருத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது.
(மீதி நாளை தொடரும்)

No comments:

Post a Comment